பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

வடலூரில் அப்புறப்படுத்தப்பட்ட பெரியார், அம்பேத்கர் சிலைகளை உடனே நிறுவ வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

வடலூரில் சாலை விரிவாக்கத்தின் போது அப்புறப்படுத்தப்பட்ட பெரியார், அம்பேத்கர் சிலைகளை உடனே நிறுவ வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியிருப்பது தொடர்பாக...

News image

பாமக நிறுவனர் ராமதாஸ்

Updated On :25 டிசம்பர் 2025, 9:59 am

வடலூரில் சாலை விரிவாக்கத்தின் போது அப்புறப்படுத்தப்பட்ட பெரியார், அம்பேத்கர் சிலைகளை உடனே நிறுவ வேண்டும் என பாமக நிறுவனத் தலைவர் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று கூறிய வள்ளலார் மண்ணான வடலூரில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் சமூகநீதி கொள்கையை நிலைநாட்டி அந்த பகுதி மக்கள் ஆதரவுடன் நான் திறந்து வைத்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் மற்றும் இந்திய அரசியலமைப்பின் தந்தை அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் சாலை விரிவாக்க பணிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

காலத்தின் தேவைக்கேற்ப சாலை விரிவாக்க பணி என்பது தவிர்க்க முடியாதது என்றாலும், சமூகநீதி தலைவர்களின் சிலைகளை இவ்வாறு அப்புறப்படுத்தி, இதுவரை மீண்டும் நிறுவாமல் மெத்தனமாக இருப்பது வேதனை அளிக்கிறது. பெரியார் , அம்பேத்கர் கொள்கைகளை கொண்டு ஆட்சி நடத்தும் இந்த அரசு, திராவிட சித்தாந்தத்தின் மூச்சாக இருக்கும் தந்தை பெரியாரின் சிலையையும், நசுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர்மூச்சாக இருக்கும் அண்ணல் அம்பேத்கரின் சிலையையும் பல மாதங்கள் ஆகியும் இதுவரை அந்த இடத்தின் அருகிலோ அல்லது மாற்று இடத்திலோ மீண்டும் நிறுவ‌ முயற்சி செய்யவில்லை.

சிலைகளை மீண்டும் அமைப்பது சம்பந்தமாக பலமுறை அந்த பகுதி பாமக நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்தையும், உரிய அலுவலர்களையும் பல முறை தொடர்பு கொண்டும், இதுவரை சிலைகளை மீண்டும் அமைப்பதற்கான பணியையும் மேற்கொள்ளாமலும், அனுமதியையும் வழங்காமல் உள்ளனர்.

சமூகநீதியை கொள்கையாக கொண்ட அரசு சமூகநீதித் தலைவர்களின் சிலைகளை உடனே மக்கள் பார்வையில் படும் படி அமைத்து, வருங்கால சந்ததிகளுக்கும் சமூக நீதி தலைவர்களை நினைவு கூறும் படி சரியான இடத்தில் உடனே மீண்டும் நிறுவ வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Summary

The statues of Periyar and Ambedkar that were removed in Vadalur must be re-erected immediately PMK Ramadoss urges

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.