வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

நியூயார்க்: இந்திய வம்சாவளி நபருக்கு 25 ஆண்டுகள் சிறை!

நியூயார்க்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அமந்தீப் சிங்

Updated On :8 பிப்ரவரி 2025, 7:51 am

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் போதையில் தனது வாகனத்தை அதி வேகமாக ஓட்டி 2 மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமந்தீப் சிங் (வயது 36) என்ற நபர் மது மற்றும் கொக்கெய்ன் பயன்படுத்திய போதையுடன் நியூயார்க்கின் வடக்கு ப்ராட்வே சாலையில் தவறான பாதையில் தனது காரை அதி வேகமாக ஓட்டியுள்ளார். மணிக்கு வெறும் 40 கி.மீ வேகத்தில் செல்ல வேண்டும் என்ற கட்டுபாடுகள் உள்ள சாலையில் அவர் 95 கி.மீ வேகத்தில் வந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, எதிரே வந்த வாகனத்தின் மீது மோதியதில் அதில் பயணித்த 14 வயது மாணவர்களான ஈதன் ஃபாகோவிட்ஸ் மற்றும் ட்ரூ ஹாசென்பெயின் ஆகியோர் சம்பவயிடத்திலேயே பலியானதுடன் மேலும், 2 பேர் படுகாயமடைந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து தப்பியோடி ஒளிந்துக்கொண்ட அமந்தீப் சிங்கை அந்நாட்டு காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது, அவர் அளவுக்கு அதிகமான போதையில் இருந்ததுடன் தான் அந்நாட்டின் நியூஜெர்சியில் இருப்பதாக கருதி தனது காரை அவர் ஓட்டி வந்துள்ளார் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தான் இந்த குற்றத்தை செய்யவில்லை என தொடர்ந்து மறுத்து வந்த அமந்தீப் சிங் கடந்த ஜனவரி மாதத்தின் துவக்கத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று (பிப்.7) மினேயோலாவிலுள்ள நசாவு கவுண்டி நீதிமன்றம் அவருக்கு 8 1/3 முதல் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

முன்னதாக, திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான அம்ந்தீப் சிங் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்வது போலீஸார் அணிந்திருந்த கேமராவில் பதிவாகியிருந்தது இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.