நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பெருமாநல்லூர் வந்து செல்லாத தனியார் பேருந்துகள் சிறைப்பிடிப்பு!

பெருமாநல்லூர் வந்து செல்லாத பேருந்துகளைச் சிறைப்பிடித்து போராட்டம்.

News image

பெருமாநல்லூர் வந்து செல்லாத தனியார் பேருந்துகள் சிறைபிடிப்பு.

Updated On :9 பிப்ரவரி 2025, 11:20 am IST

அவிநாசி: பெருமாநல்லூர் வந்து செல்லாத பேருந்துகளை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சிறைப்பிடித்தனர்.

சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை-ஈரோடு வந்து செல்லும் பெரும்பாலான தனியார், அரசுப் பேருந்துகள் பெருமாநல்லூர் பகுதிக்குள் வந்து செல்லாததால் பொதுமக்கள், வேலைக்குச் செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர்.

இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என சமூகஆர்வலர்கள், பொதுமக்கள், அனைத்துக் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், பெருமாநல்லூர் புதிய திருப்பூர் அருகே தனியார் பேருந்துகளை ஞாயிற்றுக்கிழமை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருமாநல்லூர் போலீஸார் பெருமாநல்லூர் வந்து செல்லாத தனியார் பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர்.

மேலும், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி பேருந்துகளை அனுப்பி வைத்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.