லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மணிப்பூரில் 11 கிளர்ச்சியாளர்கள் கைது!

மணிப்பூரில் 11 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டதைப் பற்றி...

கோப்புப் படம்

Published On :16 பிப்ரவரி 2025, 4:58 pm IST

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2 நாள்களில் 11 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அம்மாநிலத்தின் சூராசந்திரப்பூர் மாவட்டத்தின் பழைய கௌகுவால் பகுதியில் கடந்த பிப்.14 அன்று நடத்தப்பட்ட சோதனையில் குக்கி நேஷனல் ஆர்மி எனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 7 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று (பிப்.15) கிழக்கு இம்பால் மாவட்டத்தின் ஹுயிகாப் கிராமத்தில் நடத்தப்பட்ட சோதனையில் காங்லெய்பாக் கம்யூனிஸ் கட்சி எனும் தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2008 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் முன்னணி (UPF) மற்றும் குக்கி நேஷனல் ஆர்மி உள்பட 24 கிளர்ச்சிக் குழுக்களுடன் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மணிப்பூர் அரசு ஆகியவற்றுக்கு இடையே செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆனால், கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூர் அரசு அந்த ஒப்பந்ததிலிருந்து விலகிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.