குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

மணிப்பூரில் 11 கிளர்ச்சியாளர்கள் கைது!

மணிப்பூரில் 11 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :16 பிப்ரவரி 2025, 4:58 pm IST

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2 நாள்களில் 11 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அம்மாநிலத்தின் சூராசந்திரப்பூர் மாவட்டத்தின் பழைய கௌகுவால் பகுதியில் கடந்த பிப்.14 அன்று நடத்தப்பட்ட சோதனையில் குக்கி நேஷனல் ஆர்மி எனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 7 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று (பிப்.15) கிழக்கு இம்பால் மாவட்டத்தின் ஹுயிகாப் கிராமத்தில் நடத்தப்பட்ட சோதனையில் காங்லெய்பாக் கம்யூனிஸ் கட்சி எனும் தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2008 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் முன்னணி (UPF) மற்றும் குக்கி நேஷனல் ஆர்மி உள்பட 24 கிளர்ச்சிக் குழுக்களுடன் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மணிப்பூர் அரசு ஆகியவற்றுக்கு இடையே செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆனால், கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூர் அரசு அந்த ஒப்பந்ததிலிருந்து விலகிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.