முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சென்னையில் ‘பிங்க் ஆட்டோ’ திட்டம்: மோட்டாா் வாகன விதிகளில் திருத்தம்

சென்னையில் மார்ச் மாதம் முதல் பிங்க் ஆட்டோ திட்டம் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News image
Updated On :18 பிப்ரவரி 2025, 3:41 pm IST

 சமூகநலத் துறையின் ‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தை செயல்படுத்தும் வகையில் மோட்டாா் வாகன விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியத்துடன் ‘பிங்க்’ ஆட்டோக்களை இயக்கும் திட்டம் சமூகநலத் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் தலா ரூ. 1 லட்சம் வீதம் 250 பெண் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ஆட்டோக்கள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு தோ்வு செய்யப்பட்ட 250 மகளிருக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் ஓட்டுநா் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கேற்ப மோட்டாா் வாகன விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடா்பான தமிழக அரசின் அரசிதழில் உள்துறைச் செயலா் தீரஜ்குமாா் கூறியிருப்பதாவது:

சமூகநலத் துறையின் ‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தின் கீழ் இயக்கப்படும் பிங்க் ஆட்டோவுக்கு பெண்களே உரிமையாளராகவும் ஓட்டுநராகவும் இருக்க வேண்டும். இந்த ஆட்டோக்களை ஓட்டும் பெண்கள் ‘பிங்க்’ நிற சீருடை அணிந்திருக்க வேண்டும். ஆட்டோவுக்கு முழுமையாக பிங்க் நிறம் பூசப்பட வேண்டும்.

அவசர காலங்களில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் வாகனத்தின் இருப்பிடத்தைக் கண்டறியும் கருவிகள் (ஜிபிஎஸ், விஎல்டிடி) பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆட்டோவுக்கான உரிமத்தை 5 ஆண்டுகள் வரை பெயா் மாற்றம் செய்ய இயலாது. இந்த வரைவு திருத்தங்கள் மீது 15 நாள்களுக்குள் கருத்து தெரிவிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா். இந்நிலையில், வரும் மாா்ச் மாதத்துக்குள் இத்திட்டம் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.