நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தொடங்கிய முதல் வாரத்திலேயே டிஆர்பியில் அசத்தும் எதிர்நீச்சல் - 2 தொடர்!

எதிர்நீச்சல் - 2 தொடரின் முதல் வார டிஆர்பி குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

News image

எதிர்நீச்சல் 2

Updated On :3 ஜனவரி 2025, 4:28 pm IST

எதிர்நீச்சல் - 2 தொடரின் முதல் வார டிஆர்பி குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் டிச. 23 ஆம் தேதி முதல் வாரத்தின் அனைத்து நாள்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் பாகத்தில் இருந்த பாத்திரங்களை வைத்தே அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் திருச்செல்வம். எனினும், நாயகி மதுமிதாவுக்கு பதிலாக பார்வதி வெங்கட்ராமன் நடிக்கிறார்.

இவரைத் தவிர, எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்தில் இருந்த கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா இசை, கமலேஷ், விபு ராமன் ஆகியோர் 2ஆம் பாகத்திலும் தொடர்கின்றனர்.

இந்த நிலையில், எதிர்நீச்சல் - 2 தொடர் முதல்வாரத்திலேயே 8.01 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று மக்களின் மனம் கவர்ந்த தொடராக மாறியுள்ளது. இது இத்தொடருக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்த வாரங்களில் இத்தொடரின் டிஆர்பி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கம்போல, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களே முதல் மூன்று இடத்தைப் பிடித்துள்ளன. மூன்று முடிச்சு தொடர் 9.48 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும் 9.47 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று சிங்கப் பெண்ணே தொடர் இரண்டாம் இடத்தையும் கயல் தொடர் 9.46 டிஆர்பி புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.