மகாராஷ்டிர மாநிலம் பால்கார் மாவட்டத்தில் காதில் ஹெட்போன் அணிந்தப்படி தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சிறுமி, ரயில் மோதியதில் பலியானார்.
பால்காரின் மக்னே கிராமத்தைச் சேர்ந்த வைஷ்னவி ராவல் (வயது 16) எனும் சிறுமி, நேற்று (ஜன.23) மதியம் காதில் ஹெட்போன் அணிந்தப்படி சப்பாலே மற்றும் கெள்வே சாலை ரயில் நிலையங்களுக்கு மத்தியிலுள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். சிறுமியின் காதில் ஹெட்போன் அணிந்திருந்ததினால் அங்கு வந்துக்கொண்டிருந்த ரயிலை அவர் கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அப்போது, அந்த தண்டவாளத்தில் வந்த கொசுவெளி-அம்ரித்சர் அதிவிரைவு ரயில் சிறுமி மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர், உடனடியாக அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்தவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, விபத்தாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சிறுமியின் உடலை கூராய்வு சோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக, மகாராஷ்டிர மாநிலத்தில் வதந்தியை நம்பி ரயிலை நிறுத்தி கீழே இறங்கிய பயணிகளின் மீது மற்றொரு ரயில் மோதியதில் 12 பேர் பலியாகினர். அந்த சம்பவம் நடந்த மறுதினமே சிறுமி பலியாகியிருப்பது பொது மக்களிடையே மேலும் சோகத்தை அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில் மோதி எல்ஐசி முகவா் மரணம்

சாலையை கடக்க முயன்ற புதுகை இளைஞா் லாரி மோதி பலி

ராசிபுரம் அருகே ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

சாலையைக் கடக்க முயன்ற மான் வாகனம் மோதியதில் உயிரிழப்பு
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


