புனித யாத்திரை சென்ற பக்தர்களுக்கு வெங்காயம் கலந்த உணவு பரிமாறிய ஹோட்டல் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திங்கள்கிழமை(ஜூலை 7) இரவு, பர்காஸி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தில்லி - ஹரித்வார் தேசிய நெடுஞ்சாலையில் ஃபலௌடா புறவழிச்சாலை அருகே செயல்பட்டு வந்த ஒரு தாபாவில்(சாலையோர உணவுக் கடை) உணவருந்திய கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற கான்வர் யாத்திரை பக்தர்கள் 20 பேர் அடங்கிய ஒரு குழுவுக்கு வழங்கப்பட்ட உணவில் வெங்காயமும் கலந்திருந்ததால் அவர்கள் அனைவரும் ஆத்திரமடைந்தனர்.
பக்தர்களுக்கு வெங்காயம் கலந்த உணவு கொடுக்கப்பட்டதால் அவர்கள் கோபத்தில் கடை உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்ததாகவும், அதன்பின் கடையிலிருந்த நாற்காலிகள் மேஜைகளை தாக்கி சேதப்படுத்தியதாகவும் தெரிகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் அதிகாரிகள் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து யார் மீதும் எந்த தரப்பும் புகார் தெரிவிக்காததால் வழக்கு பதியப்படவில்லை என்ரும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சை பெரியகோயில் தேரோட்டம்; பக்தர்களுக்கு ஜூஸ், மோர் அளித்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்!
கேரளத்தில் கிருஷ்ணர் அசைவ உணவருந்துவதாகச் சித்திரித்து விளம்பரம்: ஹோட்டல் உரிமையாளர்கள் கைது!

அமர்நாத் யாத்திரை எப்போது?

கேதார்நாத்தில் கடும் பனிப்பொழிவு - புகைப்படங்கள்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


