தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த நபர் சுட்டுப்பிடிப்பு!

பஞ்சாபில் பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த நபர் சுட்டுப்பிடிக்கப்பட்டதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :1 மார்ச் 2025, 12:40 pm IST

பஞ்சாப் மாநிலத்தில் மக்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவரை காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்துள்ளனர்.

பஞ்சாபின் மொஹாலி மாவட்டத்திலுள்ள காகார் பாலத்தின் அருகில் கோல்டி பிரார் எனும் நிழல் உலக தாதாவின் பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்பட்ட நபரை காவல் துறையினர் சுற்றி வளைத்துள்ளனர்.

அப்போது, அவர் போலீஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச்செல்ல முயன்றுள்ளார். அதற்கு காவல் துறையினர் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் அவரது இடது காலில் குண்டு பாய்ந்து அவர் கீழே விழுந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும், அவரிடமிருந்து ஒரு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் அம்ரித்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்த மலிகாட் (எ) மேக்ஸி என்பதும் அவர் நிழல் உலக தாதாவான கோல்டி பிராரின் கும்பலைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், மக்களை மிரட்டி பணப் பறிப்பில் ஈடுபட்டதற்காக அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையிலுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, கோல்டி பிரார் மற்றும் கோல்டி தில்லோன் ஆகியோரின் பணம் பறிக்கும் கும்பலானது மொஹாலியைச் சேர்ந்த தொழிலதிபரைக் குறிவைத்து அவரிடம் கடந்த ஜனவரி மாதம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

மேலும், கனடா நாட்டைச் சேர்ந்த நிழல் உலக தாதாவான சதிந்தர்ஜித் சிங் (எ) கோல்டி பிரார் என்பவரை இந்திய அரசு தீவிரவாதி என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.