பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

மணிப்பூர்: கிளர்ச்சியாளர் உள்பட 5 பேர் கைது!

மணிப்பூரில் கிளர்ச்சியாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

கோப்புப் படம்.

Updated On :1 மார்ச் 2025, 5:25 am

DIN

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர் ஒருவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறையினர் இன்று (மா.1) தெரிவித்துள்ளனர்.

காங்போக்பி மாவட்டத்தின் பிம்பாரோ பகுதியில் தடைசெய்யப்பட்ட குக்கி நேஷனல் பிரண்ட் என்ற அமைப்பின் கீழ் பணியாற்றி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், கம்ஜோங் மாவட்டத்தின் இந்திய - மியான்மர் எல்லையின் அருகிலுள்ள குல்டுஹ் கிராமத்தில் தடைசெய்யப்பட்ட மற்றொரு அமைப்பான பீபள்ஸ் லிபரேஷன் ஆர்மியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று (பிப்.28) பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் கையெறி குண்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மணிப்பூரின் 5 மாவட்டங்களில் கிளர்ச்சியாளர்கள் முன்வந்து தங்களது ஆயுதங்களை பாதுகாப்புப் படையினரிடம் நேற்று (பிப்.28) ஒப்படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.