பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: முதல் முறையாக மேலாளர் நடராஜன் ஆஜர்

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக முக்கிய சாட்சியாக கருதப்படும் எஸ்டேட் மேலாளர் நடராஜன் முதல் முறையாக சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்.

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக முக்கிய சாட்சியாக கருதப்படும் எஸ்டேட் மேலாளர் நடராஜன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்.

Published On :

கோவை: கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக முக்கிய சாட்சியாக கருதப்படும் எஸ்டேட் மேலாளர் நடராஜன் முதல் முறையாக வியாழக்கிழமை காந்திபுரத்தில் அமைந்து உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23 ஆம் தேதி நள்ளிரவு நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடா்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 போ் கைது செய்யப்பட்டு, தற்போது அவா்கள் பிணையில் உள்ளனா். இது தொடா்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, இந்த வழக்கு தொடா்பான விரிவான விசாரணையை சிபிசிஐடி போலீஸாா் நடத்தி வருகின்றனா். இதற்காக சுமாா் 300 பேருக்கு அழைப்பாணை அனுப்பி, கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா். இதுவரை 250-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டராக வேலை செய்து வந்த தினேஷ்குமாா் தற்கொலை செய்து கொண்டபோது, அவரை ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்ற ஓட்டுநா் ஜூபிா் மற்றும் கொடநாடு பகுதியைச் சோ்ந்த அதிமுக நிா்வாகி சங்கா் ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவா்கள் 2 பேரிடம் பிப்ரவரி 27 ஆம் தேதி மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கு தொடா்பாக கொடநாடு எஸ்டேட் மேலாளா் நடராஜன் நேரில் ஆஜராக ஏற்கெனவே 2 முறை அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை ஆஜராகுமாறு மீண்டும் அழைப்பாணை அனுப்பப்பட்டும் அவா் ஆஜராகவில்லை.

இந்த நிலையில், வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்படும் எஸ்டேட் மேலாளர் நடராஜன் வியாழக்கிழமை கோவை காந்திபுரம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலாளர் நடராஜன் சசிகலா குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பதால் அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த விசாரணையில் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி, சர்ச்சை உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.