தஞ்சைப் பெரிய கோயில்
தஞ்சைப் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுவதால் மே 7-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயிலில் 18 நாள்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவினை முன்னிட்டு தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற மே 7ஆம் நடைபெறுகிறது.
அதனை முன்னிட்டு அன்றைய தினம் தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மே 24-ஆம் தேதி அலுவலகங்கள் செயல்படும் எனவும் அறிவித்துள்ளார்.