நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

மின்சாரம் பாய்ந்து இரு இளைஞர்கள் பலி!

தியாகதுருகத்தில் மின்சாரம் பாய்ந்து இரு இளைஞர்கள் பலி.

News image

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ஷாகில், அரவிந்த் .

Updated On :9 நவம்பர் 2025, 1:30 pm IST

கள்ளக்குறிச்சி: தியாகதுருகத்தில் மின்சாரம் பாய்ந்து இரு இளைஞர்கள் சனிக்கிழமை இரவு பலியாகினர்.

கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் அண்ணாநகரில் வாட்டர் சர்வீஸ் நிலையம் வைத்து உள்ளவர் ஷாஷன். இவரது வாட்டர் சர்வீஸ் நிலையத்தில் தியாகதுருகம் கரீம்ஷா தக்கா பகுதியைச் சேர்ந்த ஷாகில் (17) வாகனங்களை கழுவும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

சனிக்கிழமை இரவு தென்கீரனூரைச் சேர்ந்த தண்டபாணி மகன் அரவிந்த் (27) காரை கழுவுவதற்காக கடைக்கு சென்றார். அங்கு பணியை முடித்து விட்டு ஷாகில் மோட்டார் சுவிட்சை நிறுத்த முற்பட்ட போது மின்சாரம் பாய்ந்தது.

மின்சாரம் பாய்ந்த இளைஞரை காப்பாற்ற முயன்ற அரவிந்த் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. உடனே இருவரையும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர் முன்பே உயிரிழந்து விட்டதா தெரிவித்த நிலையில், இருவரின் உடல்களையும் உடற்கூறு ஆய்வு மேற்கொள்வதற்காக வைத்துவிட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Summary

Kallakurichi: Two youths died after being electrocuted in Thiyagadurugam on Saturday night.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.