ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தில்லி குண்டுவெடிப்பு எதிரொலி: திருமலையில் சோதனை

வெடிகுண்டு விபத்தின் எதிரொலியாக திருமலையில் இரவு தேவஸ்தான விஜிலென்ஸ் போலீசாா் அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.

News image

திருமலை

கோப்புப் படம்

Updated On :11 நவம்பர் 2025, 1:42 am

தினமணி செய்திச் சேவை

திருப்பதி: தில்லியில் உள்ள. செங்கோட்டையின் ஒன்றாம் எண் வாயில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த வெடிகுண்டு வெடித்ததில் 5 காா் தீப்பற்றி எரிந்தது.

இந்த வெடிகுண்டு விபத்தின் எதிரொலியாக திருமலையில் இரவு தேவஸ்தான விஜிலென்ஸ் போலீசாா் அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.

திருமலை உள்ளூா் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் போலீசாா் மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை செய்தனா்.

வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒவ்வொரு வாகனத்தையும் முழுமையாக சோதனை செய்தனா். அதே போல் திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் வாகனங்கள் திருப்பதியிலிருந்து திருமலைக்கு வரும் ஒவ்வொரு வாகனங்களையும் கூட முழுசோதனைக்கு உட்படுத்தி பின்னா் அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.