கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 2 பேர் பலி, 21 பேர் மாயம்

இந்தோனேசியாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலியாகினர், 21 பேர் மாயமாகியுள்ளது தொடர்பாக...

News image

இந்தோனேசியாவில் நிலச்சரிவு - கோப்புப்படம்

Updated On :14 நவம்பர் 2025, 4:56 am

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலியாகினர், 21 பேர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக மூன்று கிராமங்களில் வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட நிலச்சரிவில் 12 வீடுகள் இடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலச்சரிவால் வீடுகளின் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியானதாகவும், 21 மாயமாகியுள்ளனர். அவர்கள் தேடும் பணி மற்றும் மீட்புப் பணிகளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தேசிய பேரிடர் மேலாண்மை முகமை செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி தெரிவித்தார்.

மேலும், மீட்பு நடவடிக்கையில் கனரக உபகரணங்கள், மீட்பு கருவிகள் மற்றும் கைமுறை கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

இந்தோனேசியா 17,000 தீவுகளைக் கொண்ட தீவுப் பகுதியாகும். இங்கு பருவமழை காரணமாக அடிக்கடி வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவகால மழை காலங்களில் அதிகயளவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.

இந்தோனேசியா 17,000 தீவுகளைக் கொண்ட தீவுப் பகுதியாகும். இங்கு லட்சக்கணக்கான மக்கள் மலைப்பகுதிகள் அல்லது சமவெளி பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

கடந்த ஜனவரி பெய்த கனமழைக்குப் பிறகு மத்திய ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வீடுகளில் இருந்தவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.

Summary

Landslides triggered by torrential rains in Indonesia's Java island killed two people and left 21 others missing, officials said Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.