சிதம்பரம்: சிதம்பரம் லால்கான் தெருவில் உள்ள நவாப் பள்ளிவாசலில் சனிக்கிழமை முஸ்லிம்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிதம்பரம் நவாப் அப்துல் நபிகான் மஸ்ஜித் (GS 62/SA) சுமார் 60 ஆண்டுகளாக ஜமாத்தார்களால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு வக்ஃப் வாரியம் ஜமாத்தார்களின் ஆலோசனை கேட்காமல் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வக்பு வாரியம் ஏழு பேர் கொண்ட குழுவிற்கு இப்பள்ளியை நிர்வாகம் செய்ய தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. இதனை கண்டித்து தற்போது பள்ளிவாசலை நிர்வாகம் செய்து வரும் ஜமாத்தார்கள் சனிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்லாமியர்கள் இரு பிரிவினிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் மேற்பார்வையில் சிதம்பரம் டிஎஸ்பி டி.பிரதீப் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Summary
Muslims hold sit-in protest at Chidambaram Nawab Mosque
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாநகராட்சி அதிகாரி தற்கொலை முயற்சி

சிதம்பரம் அருகே கடலுக்குச் சென்ற மீனவா்கள் 3 போ் மாயம்: மீட்புப்பணியை தீவிரப்படுத்தக்கோரி முற்றுகைப் போராட்டம்

வீட்டில் தீ விபத்து; பொருள்கள் சேதம்

பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



