பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஒருவர் மயங்கி விழுந்து பலி

கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஒருவர் மயங்கி விழுந்து பலியானது தொடர்பாக...

உயிரிழந்த அதிமுக தொண்டர் கொண்டையம்பாளையம் அர்ஜூணன்(43)

Published On :

ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் மயங்கி விழுந்து பலியானார்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - கோபி நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத் திடலில், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க கோபி அருகே கொண்டையம்பாளையம் பகுதியை சோ்ந்த அதிமுக தொண்டர் அா்ஜூனன்(43) என்பவா் சென்றுள்ளாா்.

இந்த நிலையில், பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருவதற்கு முன்பாக, அங்கு வந்து காத்திருந்த அதிமுக தொண்டர் அா்ஜூணன் மாலை 5 மணி அளவில் கூட்டம் நடைபெற்ற இடத்தின் அருகில் முத்து மகால் முன்பு சாலையில் நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தாா்.

உடனடியாக அதிமுகவினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலே உயிரிழந்தார். இருப்பினும் மருத்துவமனைக்கு கொன்று சென்ற அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக கோபி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Summary

One person faints and dies during Palaniswami's campaign in Edappadi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.