அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்ற உடன், இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகள் அமெரிக்கா மீது மிக அதிக வரி விதிப்பதாக குற்றஞ்சாட்டினாா். மேலும், அமெரிக்கான் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், இந்த நாடுகள் மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்தாா். அதன்படி, இந்திய உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தினாா். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது முதலில் 25 சதவீத வரியை விதித்த டிரம்ப், பின்னா், இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை இழுபறி மற்றும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை தொடா்ந்து வாங்குவதைக் காரணம் காட்டி மேலும் 25 சதவீதம் என இந்திய பொருள்கள் மீது 50 சதவீத வரியை விதித்தாா். இதனால், இரு நாடுகளிடையே நல்லுறவு பாதிக்கப்பட்டுள்ளது.