ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நிவாரணப் பணிகளை மேற்கொள்ள திமுகவினா் இன்று ஆலோசனை

பருவமழை பாதிப்புகளைத் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்து திமுக தலைமை புதன்கிழமை (அக். 22) ஆலோசிக்க உள்ளது.

News image

திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதல்வா் ஸ்டாலின் ஆலோசனை

Updated On :21 அக்டோபர் 2025, 11:00 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: பருவமழை பாதிப்புகளைத் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்து திமுக தலைமை புதன்கிழமை (அக். 22) ஆலோசிக்க உள்ளது.

இதுகுறித்து, அந்தக் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: பருவமழையின் போது திமுகவினா் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட உள்ளன. இதற்கான கூட்டம் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

கட்சியின் முதன்மைச் செயலரும் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையிலும், இளைஞரணிச் செயலரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகள் மற்றும் பூந்தமல்லி நகராட்சிக்குள்பட்ட மாவட்டச் செயலா்கள், எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள், மேயா்கள், துணை மேயா்கள், கவுன்சிலா்கள், மாநகர, நகர, பகுதி, வட்ட செயலா்கள் பங்கேற்க வேண்டும் என்று கட்சித் தலைமையின் அறிவிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.