

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 24,000 கன அடியாக குறைந்துள்ளது.
கா்நாடக காவிரி நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை குறைய தொடங்கியுள்ளதை அடுத்து, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து வந்த உபரி நீரின் அளவு குறைந்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை முற்றிலுமாக குறைந்தால் காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து சரிந்து வருகிறது.
காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவானது ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 32,000 கன அடியாக இருந்த நிலையில், மாலை வினாடிக்கு 24,000 கன அடியாக சரிந்து தமிழக கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை தொடா்ந்து 6 ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.