நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

9 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை பாரதியார் பல்கலைக் கழக பதிவாளர் நியமனம்!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் பதிவாளராக பேராசிரியர் இரா.ராஜவேல் நியமிக்கப்பட்டு உள்ளார்.

News image

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பேராசிரியர் இரா.ராஜவேல் .

Updated On :30 அக்டோபர் 2025, 10:38 am IST

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் பதிவாளராக பேராசிரியர் இரா.ராஜவேல் நியமிக்கப்பட்டு உள்ளார்.

கோவை, பாரதியார் பல்கலைக் கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில்,

பாரதியார் பல்கலைக் கழகத்தில் 9 ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தர பதிவாளர் பதவி நியமிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது முழு நேர நிரந்தர பதிவாளராக பேராசிரியர் இரா.ராஜவேல் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தற்போது பதிவாளர், பல்கலைக் கழக சட்ட விதி மற்றும் முறைமைகள் உயர்கல்வித் துறை கடிதம் எண் 250-ன் படி மற்றும் துணைவேந்தர் பொறுப்புக் குழுவின் ஆணையின்படி, 3 ஆண்டுகளுக்கும் மேலாக துறைத் தலைவர்களாக பணியாற்றி வந்த பேராசியர்களை சுழற்சி முறையில் மாற்றம் செய்வதால் துறைகளின் வளர்ச்சி பலவகைகளில் மேம்படும் என்பதாலும், 17 துறைகளில் பணிமூப்பு அடிப்படையில் பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்கள் புதிய துறைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து இனிவரும் காலங்களில் பல்கலைக் கழகத் துறைகளில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் துறைத் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள் என கூறப்பட்டு உள்ளது.

Summary

Coimbatore Bharathiar University Registrar appointed after 9 years!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.