சென்னை : முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விலகியது வருத்தமளிப்பதாக தெரிவித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கடந்த 3 ஆம் தேதி புதுதில்லியில் உள்ள அமித்ஷாவின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. நல்ல முதல்வரை தோ்ந்தெடுப்பதற்காக டிசம்பா் 6-ஆம் தேதி அமமுக தொண்டா்களின் வேண்டுகோளுக்கிணங்க நல்ல முடிவு எடுக்கப்படும். அதாவது நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம். ஆனால் டிசம்பா் 6 ஆம் தேதி அதுகுறித்து முறைப்படி அறிவிப்போம் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் அடுத்தடுத்து விலகியது பாஜக தலைவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுடன் பேசுகையில், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகல் முடிவு வருத்தமளிப்பதாகவும், பாஜக தலைவர்கள் அவர்களை மீண்டும் கூட்டணிக்கு அழைத்து வர முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
டிடிவி தினகரனுடன் போனில் பேசியதாகவும், அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவரும் பெருந்தன்மைமிக்க அரசியல்வாதிகள் என்பதால், அவர்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.
மேலும், விஜய்க்கு ஒரு கூட்டம் இருக்கிறது, எனவே அவர் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறிய அண்ணாமலை, தாக்கம் என்பது வேறு, ஆட்சி அமைப்பது வேறு என்றும், அதிமுக பாஜக கூட்டணியே தேர்தலில் வெற்றி பெறும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.
Summary
Former Chief Minister O. Panneerselvam and TTV Dinakaran should reconsider their decision to quit the National Democratic Alliance.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடரும் பாலியல், கொலை... முதல்வர் ஜோசப் விஜய்யின் வீரவசனம் என்ன ஆனது? - டிடிவி தினகரன் கேள்வி

சூலூர் சிறுமி கொலை: பெண்கள் பாதுகாப்பில் தனிகவனம் தேவை: முதல்வருக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

கால் இழந்த சிறுமியின் சிகிச்சைக்கு முதல்வா் உதவ வேண்டும்: டிடிவி தினகரன்

திமுக கூட்டணியில் நீடிக்க காங்கிரஸுக்கு விருப்பமில்லை: கே. அண்ணாமலை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



