குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகின் மிகப்பெரிய ஜனநாயகமும் மனிதநேயத்தின் ஆறில் ஒருபங்கு உறைவிடமாகத் திகழும் பாரதத்தின் குடியரசு துணைத் தலைவராக தேர்வானதற்கு இதயங்கனிந்த வாழ்த்துகள்!
நமது நாட்டின் பிரதிநிதிகள் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே நீங்கள் இப்பதவிக்கு வளர்ச்சி அடைந்துள்ளமைக்கானச் சான்று.
பொது வாழ்வில் உங்கள் பரந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ள நீங்கள், இப்பதவிக்கு தேஎர்வாகியுள்ளதன் மூலம் அப்பதவி பெரும் புகழடையப் போகிறது.
இத்தருணத்தில் இப்பெரும் தேசத்துக்கான உங்களின் சேவைக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

படம் : PTI
முன்னதாக, நாட்டின் இரண்டாவது உயரிய அரசமைப்புப் பதவியான குடியரசு துணைத் தலைவா் பதவியை வகித்து வந்த ஜகதீப் தன்கா், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த ஜூலை 21-ஆம் தேதி திடீரென ராஜிநாமா செய்தாா். உடல் நிலையைக் காரணம் காட்டி அவர் பதவி விலகினாா்.
அதைத் தொடா்ந்து, குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது. அதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி தரப்பு வேட்பாளரான ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நிதிபதி பி. சுதர்ஷன் ரெட்டியைவிட அதிக வாக்குகள் பெற்று தமிழகத்தைச் சேர்ந்த சி. பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
Summary
Former Vice President Jagdeep Dhankhar greets his successor CP Radhakrishnan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் குடியரசு துணைத் தலைவா்

ஒற்றுமையைப் பாதுகாக்க மாணவா்கள் முன்வர வேண்டும்: குடியரசு துணைத் தலைவா் வேண்டுகோள்

குடியரசு துணைத் தலைவா் இன்று கோவை வருகை

வெனிசுவேலா நிலநடுக்கத்தில் 32 பேர் பலி: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



