

சேலம்: தலைவாசல் அருகே 17 வயது பள்ளி மாணவிக்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதற்கு காரணமான இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், வீரகனூர் அரசுப் பள்ளியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில், திடீரென அந்த மாணவி வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்போது மாணிவியை மருத்துவர்கள் சோதித்து பார்த்ததில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மாணவிக்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் ஆத்தூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், 24 வயது இளைஞர் ஒருவரோடு மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், இதில் மாணவி கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாணவியை கர்ப்பம் அடைய செய்த அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆத்தூர் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.