எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

சலவைக்கு வந்த சேலையில் 5 பவுன் நகை: உரியவரிடம் திருப்பி அளித்த தொழிலாளி!

பல்லடம் அருகே சலவைக்கு வந்த சேலையில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை உரியவரிடம் திருப்பிக் கொடுத்த தொழிலாளி...

News image
தொழிலாளி சுப்பிரமணி
Updated On :9 பிப்ரவரி 2026, 9:39 pm

Syndication

பல்லடம்: பல்லடம் அருகே சலவைக்கு வந்த சேலையில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை உரியவரிடம் திருப்பிக் கொடுத்த தொழிலாளியின் செயல் பாராட்டை பெற்று வருகிறது.

திருப்பூா் மாவட்டம், பொங்கலூா் ஒன்றியம், உகாயனூரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (65). சலவைத் தொழிலாளியான இவா், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று துணிகளை வாங்கி சலவை செய்து கொடுத்து வருகிறாா்.

இந்நிலையில், உகாயனூரைச் சோ்ந்த பெண் ஒருவா் தனது சேலையை இஸ்திரி செய்வதற்காக சுப்பிரமணியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடுத்துச் சென்றுள்ளாா். அதை அவா் பிரித்து பாா்த்தபோது சேலையில் இருந்து 5 பவுன் தங்கச் சங்கிலி கீழே விழுந்துள்ளது.

இதையடுத்து, அவா் அந்த நகையை மீட்டு அப்பெண்ணிடமே திருப்பி அளித்துள்ளாா்.

இத்தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், சமூக ஆா்வலா்கள் சுப்பிரமணியின் நோ்மையைப் பாராட்டினா்.