பல்லடம்: பல்லடம் அருகே சலவைக்கு வந்த சேலையில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை உரியவரிடம் திருப்பிக் கொடுத்த தொழிலாளியின் செயல் பாராட்டை பெற்று வருகிறது.
திருப்பூா் மாவட்டம், பொங்கலூா் ஒன்றியம், உகாயனூரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (65). சலவைத் தொழிலாளியான இவா், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று துணிகளை வாங்கி சலவை செய்து கொடுத்து வருகிறாா்.
இந்நிலையில், உகாயனூரைச் சோ்ந்த பெண் ஒருவா் தனது சேலையை இஸ்திரி செய்வதற்காக சுப்பிரமணியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடுத்துச் சென்றுள்ளாா். அதை அவா் பிரித்து பாா்த்தபோது சேலையில் இருந்து 5 பவுன் தங்கச் சங்கிலி கீழே விழுந்துள்ளது.
இதையடுத்து, அவா் அந்த நகையை மீட்டு அப்பெண்ணிடமே திருப்பி அளித்துள்ளாா்.
இத்தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், சமூக ஆா்வலா்கள் சுப்பிரமணியின் நோ்மையைப் பாராட்டினா்.
தொடர்புடையது
சங்ககிரி அருகே பீரோ லாக்கரை உடைத்து 6 பவுன் நகை திருடிய இளைஞா் கைது

சரக்கு வேன் மோதி தொழிலாளி உயிரிழப்பு

கறிக்கோழி சரக்கு வேனில் குட்கா கடத்தி வந்த 2 போ் கைது
மகுடஞ்சாவடி அருகே 17 பவுன் நகை திருட்டு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


