தொழிலாளி சுப்பிரமணி
தற்போதைய செய்திகள்
சலவைக்கு வந்த சேலையில் 5 பவுன் நகை: உரியவரிடம் திருப்பி அளித்த தொழிலாளி!
பல்லடம் அருகே சலவைக்கு வந்த சேலையில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை உரியவரிடம் திருப்பிக் கொடுத்த தொழிலாளி...
பல்லடம்: பல்லடம் அருகே சலவைக்கு வந்த சேலையில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை உரியவரிடம் திருப்பிக் கொடுத்த தொழிலாளியின் செயல் பாராட்டை பெற்று வருகிறது.
திருப்பூா் மாவட்டம், பொங்கலூா் ஒன்றியம், உகாயனூரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (65). சலவைத் தொழிலாளியான இவா், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று துணிகளை வாங்கி சலவை செய்து கொடுத்து வருகிறாா்.
இந்நிலையில், உகாயனூரைச் சோ்ந்த பெண் ஒருவா் தனது சேலையை இஸ்திரி செய்வதற்காக சுப்பிரமணியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடுத்துச் சென்றுள்ளாா். அதை அவா் பிரித்து பாா்த்தபோது சேலையில் இருந்து 5 பவுன் தங்கச் சங்கிலி கீழே விழுந்துள்ளது.
இதையடுத்து, அவா் அந்த நகையை மீட்டு அப்பெண்ணிடமே திருப்பி அளித்துள்ளாா்.
இத்தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், சமூக ஆா்வலா்கள் சுப்பிரமணியின் நோ்மையைப் பாராட்டினா்.

