

சூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன், வெள்ளி மற்றும் சனி ஆகிய 6 கோள்கள் பிப். 28 ஆம் தேதி வானில் ஒரே நோ்கோட்டில் அணிவகுக்கும் அரிய மற்றும் அழகான நிகழ்வை நாடு முழுவதும் மக்கள் கண்டு மகிழலாம் என வானிலை அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இதில் பூமி ஒரு முறை சூரியனை சுற்றிவர 365 நாள்கள் ஆகின்றன. கோள்களின் சுற்று வட்டப் பாதையில் ஒன்றை ஒன்று சந்திக்கும் அபூர்வ நிகழ்வுகள் வானில் தென்படுவது வழக்கமானது. அதன்படி, கடந்த ஆண்டு ஜன. 22 ஆம் தேதி வானில் சூரியன் சுற்றுப் பாதையில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் தோன்றும் நிகழ்வுகளை காண முடிந்தது.
அதேபோன்று இந்த ஆண்டும் இரண்டு முறை ஒரே நேர்க்கோட்டில் 6 கோள்கள் அணிவகுத்து வரும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
அதன்படி, செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன், வெள்ளி மற்றும் சனி ஆகிய 6 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் சனிக்கிழமை (பிப். 28) அணிவகுத்து வரும் நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்த அரிய நிகழ்வில் வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களை வெறும் கண்களால் மக்கள் காண முடியும். மிகத்துல்லியமாக, தொலை நோக்கி மூலம் காண முடியும். நெப்டியூன் மற்றும் யுரேனஸ் தொலைவில் உள்ளதால் நவீன தொலைநோக்கி மூலம் மட்டுமே காண முடியும்.
இவற்றைக் காண்பதற்காக அறிவியல் அமைப்புகள் சார்பில் நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
6 கோள்கள் அணிவகுத்து வரவிருப்பது குறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறியதாவது:
கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வரவில்லை. பூமியில் இருந்து பார்க்கும் போது அவை ஒரே நேர்க்கோட்டில் இருப்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துக்கின்றன. பல கோள்கள் வானத்தின் ஒரே பகுதியில் வரிசையாக நிற்பதால், இந்த நிகழ்வு பெரும்பாலும் கிரக அணிவகுப்பு என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் ஆறு கோள்களும் வரிசையாக நிற்கின்றன. இந்த அரிய வகை சீரமைப்பு மாலை வானத்தை ஒளிரச் செய்யும், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வானத்தில் ஆறு கோள்கள் இணையும் சிறிது நேரத்திலேயே ஒரு அற்புதமான காட்சி வரும். சிறிது நேரம், வானம் தெளிவாக இருந்தால், ஒரே நேரத்தில் பல கிரகங்களைப் பார்க்கும் ஒரு மாயாஜால வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கும். இப்போதிலிருந்து பிப்ரவரி இறுதி வரை, புதன், வெள்ளி, வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை வானில் ஒரே பகுதியில் தெரியும்.
நாசாவின் கூற்றுப்படி, இந்த அரிய நிகழ்வை பிப்ரவரி 28 சனிக்கிழமை காணலாம். செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை தெரியும். வீனஸ் மிகவும் பிரகாசமாக இருக்கும். இதனை பார்ப்பதற்கு தெளிவான வானிலை மற்றும் தடையற்ற அடிவானம் அவசியம். இந்த அரிய வானிலை நிகழ்வு அனைவருக்கும் ஒரு அற்புதமான காட்சியை வழங்கும். இதில், புதனும் வெள்ளியும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அடிவானத்திற்கு சற்று உயரமாகத் தோன்றும், அதே நேரத்தில் சனி அடிவானத்திற்கு அருகில் தெரியும். இந்த நிகழ்வின் போது இரவு வானத்தில் கிட்டத்தட்ட முழு நிலவும் பிரகாசமாக தெரியும்.
எந்தெந்த கிரகங்கள் தெரியும்
வானத்தில் மொத்தம் ஆறு கோள்களைக் காண முடியும்: புதன், வெள்ளி, வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன். வீனஸ் மிகவும் பிரகாசமாகவும் எளிதாகவும் காணப்படும். இது மேற்கு வானத்தில் தாழ்வாகவும், புதன் வீனஸுக்கு சற்று மேலே சிறிது நேரம் தெரியும். சனி தென்மேற்கில் சற்று உயரமாகவும், வியாழன் கிழக்கில் உயரமாக பிரகாசிக்கும், இரவு செல்லச் செல்ல தெளிவாகும். யுரேனஸ் வியாழனுக்கும் சனிக்கும் இடையில் மற்றும் ப்ளேயட்ஸ் விண்மீன் கூட்டத்திற்குக் கீழே காணப்படும், ஆனால் அதனை தொலைநோக்கியால் மட்டுமே பார்க்க முடியும். நெப்டியூன் சனிக்கு மிக அருகில் இருக்கும், அதனையும் தொலைநோக்கியால் மட்டுமே பார்க்க முடியும்.
தெளிவான வானம் அவசியம்
வியாழன், வெள்ளி, சனி மற்றும் செவ்வாய் கிரகங்களை மைதானங்கள், கடற்கரையில் இருந்தோ அல்லது வீட்டின் மாடியில் இருந்தோ பார்க்க முடியும். செவ்வாய் இரவு 9 மணியளவில் உதயமாகும். கோள்களை தனித்தனியாகவும் பார்க்க முடியும். அதேநேரம், யுரேனஸ் மற்றும் நெப்டியூனை நவீன தொலைநோக்கியால் மட்டுமே பார்க்க முடியும். எனினும், அவற்றைக் கண்டறிவது சற்று கடினம். இந்த அரிய நிகழ்வை காண்பதற்கு தெளிவான வானம் அவசியம்.
இந்த அரிய மற்றும் அழகான நிகழ்வின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், கோள்கள் பொதுவாக வானத்தில் தோராயமாக ஒரே பாதையில் தோன்றும். இந்த அணிவகுப்பு அதன் நேரத்தின் காரணமாக தனித்துவமானது. இதுபோன்று 5 அல்லது 6 கோள்களின் அணிவகுப்பு மீண்டும் இந்த ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடைபெறும் என கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.