டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 9,801 பேருக்கு நாளை பணி நியமன ஆணை: முதல்வர் வழங்குகிறார்!

தமிழ்நாடு அரசின் தேர்வு முகமைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9,801 பேருக்கு வெள்ளிக்கிழமை (பிப்.13) பணி நியமன ஆணைகள் வழங்குவது குறித்து...
டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கி, அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.
டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கி, அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின். கோப்புப்படம்
Updated on
2 min read

தமிழ்நாடு அரசின் தேர்வு முகமைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9,801 பேருக்கு வெள்ளிக்கிழமை (பிப்.13) பணி நியமன ஆணைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

தமிழ்நாடு அரசின் தேர்வு முகமைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9,801 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்குதல் அரசின் பணிகளில் தொய்வு ஏற்படாத வண்ணம், காலிப்பணியிடங்கள் அவ்வப்போது தமிழ்நாட்டின் அனைத்து தெரிவு முகமைகள் மற்றும் வாரியங்கள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. படித்த, தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பினைப் பெற்று தரும் பணிகள் தமிழ்நாடு அரசால் தொடர்ந்து செவ்வனே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன், மாநில மற்றும் மத்திய அரசின் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

9, 801 பேருக்கு பணி நியமன ஆணை

அந்த வகையில், திராவிட மாடல் ஆட்சியில் இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளை நனவாக்கும் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக நாளை (பிப்.13) சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள விழாவில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9, 801 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்க உள்ளார்.

செனாய் நகரில் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம்

மேலும், செனாய் நகரில் ரூ.62.50 கோடி மதிப்பீட்டில் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் “எளிமை ஆளுமை” திட்டத்தில் கூடுதலாக எளிமைப்படுத்தப்பட்ட 50 சேவைகள் அறிமுகமும், அதைத் தொடர்ந்து, சென்னை செனாய் நகரில் ரூ.62 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் 500 தேர்வர்கள் தங்கிப் பயிலக் கூடிய வகையில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி, “எளிமை ஆளுமை” முன்முயற்சியின் முதல் கட்டமாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 முக்கிய சேவைகள் நெறிப்படுத்தப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது மேலும் கூடுதலாக எளிமைப்படுத்தப்பட்ட 50 சேவைகளை முதல்வர் அறிமுகப்படுத்துகிறார்.

“தேர்வுக்களம்”கைபேசி செயலி அறிமுகம்

தமிழ்நாடு அரசினால் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது, நுழைவுச் சீட்டு, பாடத்திட்டங்கள் பதிவிறக்கம், மாதிரி வினாத்தாள்கள் என அனைத்து விதமான நடைமுறைகளையும் கைபேசியிலேயே எளிதாகக் கையாளும் விதமாக “தேர்வுக்களம்” என்னும் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் மத்திய அரசின் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் விவரங்களையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கட்டணமின்றி பயின்றிட பயிற்சிகள் வழங்கும் இணைய தளம்

அரசு ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு, திட்டமேலாண்மை, தொடர்பாடல் உள்ளிட்ட திறன்களை மேம்படுத்திக் கொள்ள கட்டணமின்றி பயின்றிட பயிற்சிகள் வழங்கும் இணைய தளத்தை (Web Portal)தொடங்கி வைத்து, அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரியின் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு அக்கல்லூரியின் வளாகத்திலேயே ரூ. 3 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் மூன்று அடுக்ககத்தில் எட்டு குடியிருப்புகள் கொண்ட கட்டடத்தையும் முதல்வர் திறந்து வைக்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சியானது, தமிழ்நாட்டைச் சார்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான அரசின் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாகவும், வேலைவாய்ப்பு முன்னேற்றத்தின் முன்னணி மாநிலமாகவும் தமிழ்நாட்டை உருவாக்கும் இலக்குடன், இளைஞர்களின் எதிர்காலத்திற்கான உறுதியான படியாக அமைவதுடன், தமிழ்நாடு அரசின் “வெல்வோம் ஒன்றாக” என்ற தாரக மந்திரத்துடன் இளைஞர்களின் வாழ்வினை உயர்த்துவதற்கான நிகழ்வாகும்.

இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர், அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Summary

TNPSC and other Govt Exam appointment orders and builing inauguration and laying foundation

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கி, அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.
நெல் ஈரப்பதம்: தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு - மக்களவையில் மத்திய அரசு பதில்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com