ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் ஜம்மு-காஷ்மீர்! 67 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை!!

67 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டிக்கு ஜம்மு-காஷ்மீர் அணி முன்னேறியுள்ளதைப் பற்றி...

News image
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஜம்மு-காஷ்மீர் அணி வீரர்கள். - படம்: பிடிஐ
Updated On :18 பிப்ரவரி 2026, 7:53 am

இணையதளச் செய்திப் பிரிவு

67 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டிக்கு ஜம்மு-காஷ்மீர் அணி முன்னேறியுள்ளது.

மேற்கு வங்கத்தின் கல்யாணியில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் பெங்கால் - ஜம்மு-காஷ்மீர் அணிகள் மோதின. கடந்த பிப். 15 ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் அணியின் கேப்டன் பராஸ் டோக்ரா முதலில் பந்து வீசுவதாகத் தெரிவித்தார்.

பெங்கால் முதல் இன்னிங்ஸ்- 328/10

அதன்படி, முதலில் ஆடிய பெங்கால் அணி தனது முதல் இன்னிங்ஸில் 97.1 ஓவர்களில் 328 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக சுதீப் குமார் கராமி 146 ரன்கள் குவித்தார். ஜம்மு-காஷ்மீர் அணித் தரப்பில் அக்யூப் நபி தார் அட்டகாசமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

ஜம்மு-காஷ்மீர் முதல் இன்னிங்ஸ்- 302/10

பின்னர், தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜம்மு-காஷ்மீர் அணி 76.1 ஓவர்களில் 302 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக அப்துல் சமத் 82 ரன்கள் விளாசினார். பெங்கால் அணி வீரர் முகமது ஷமி 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆச்சரியப்படுத்தினார்.

பெங்கால் 2-வது இன்னிங்ஸ்- 99/10

அதைத் தொடர்ந்து 26 ரன்கள் முன்னிலையுடன் ஆட்டத்தைத் தொடங்கிய பெங்கால் அணி 25.1 ஓவர்களில் வெறும் 99 ரன்களுக்கு ஜம்மு-காஷ்மீரிடம் சரணடைந்தது. நபி தார், சுனில் குமார் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஜம்மு-காஷ்மீர் 2-வது இன்னிங்ஸ்-126/6

பின்னர், 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஜம்மு-காஷ்மீர் அணி 34.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

அதிகபட்சமாக வன்ஷ்ராஜ் சர்மா 43 ரன்களும், அப்துல் சமத் 30 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம், ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் ஜம்மு-காஷ்மீர் அணி அறிமுகமாகி 67 ஆண்டுகளில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளை எடுத்த ஜம்மு-காஷ்மீர் வீரர் அக்யூப் நபி தார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

முதல்முறையாக ரஞ்சிக் கோப்பை இறுதிப்போட்டிக்குத் தேர்வாகியுள்ள ஜம்மு-காஷ்மீர் அணிக்கு மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

summary

Jammu and Kashmir scripted history by reaching the Ranji Trophy finals for the first time in their 67-year history, defeating two-time former champions Bengal by six wickets on day four of the semifinal here on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.