

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே சொக்கநாதபுரத்தில் மாட்டு வண்டி பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மதகுபட்டி அருகே சொக்கநாதபுரம் சேவுகபெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு இரண்டு பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது.
இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் பெரிய மாடுகளுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாடுகளுக்கு 5 கி.மீ. தொலைவும் பந்தய எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
பெரியமாடு, சிறியமாடு என இரு பிரிவுகளாக சொக்கநாதபுரத்திலிருந்து மதகுபட்டி மின்வாரிய அலுவலகம் வரை நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தம் 42 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
பெரியமாடு பிரிவில் 14 ஜோடி மாடுகளும், சிறியமாடு பிரிவில் 23 ஜோடிகள் என மொத்தம் 28 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளில் மாடுகள் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு சீறிப்பாய்ந்து சென்றன.
இந்த பந்தயத்தில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையாளர்களுக்கும் சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த பந்தயத்தை அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான மக்கள், ரசிகர்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று உற்சாகமாக கண்டுகளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.