மத்திய, மாநில அரசுகள் எப்பொழுதும் இணைந்து செயல்படுவதுதான் ஒரு பகுதி முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும் என்று குடியரசு துணைத்தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் செளமிய நாராயணப் பெருமாள் கோயிலில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, மக்கள் அனைவரது அமைதி, செழிப்பு மற்றும் நலத்துக்காக வேண்டிக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
வேலுநாச்சியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பின்னா், சிவகங்கை அரண்மனையில் உள்ள ராணி வேலுநாச்சியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

சிவகங்கை அரண்மனையில் உள்ள ராணி வேலுநாச்சியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய குடியரசு துணைத்தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்
இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சிவகங்கை என்பது வீரம் விளைந்த மண்ணாகவும், மகத்தான சரித்திரத்திற்குச் சொந்தமான இடமாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக, இழந்த அரசைப் போா் புரிந்து மீண்டும் கைப்பற்றிய ஒரே மகாராணி வேலு நாச்சியாா் என்ற பெருமைக்குரிய மண் சிவகங்கை .
இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை
மத்திய-மாநில அரசுக்கு இடையே இணைக்கிடையே இணக்கம் இல்லை என்று சொல்லப்படுவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, குடியரசு துணைத்தலைவராக இருப்பவா், அரசியல் ரீதியான கேள்விகளுக்குப் பதிலளித்தால் சரியாக இருக்காது. அதை மாநிலத்தலைவா் நயினாா் நாகேந்திரன் போன்ற அரசியல் தலைவா்களிடம் கேட்க வேண்டும். எனினும் மத்திய, மாநில அரசுகள் எப்பொழுதும் இணைந்து செயல்படுவதுதான் ஒரு பகுதியின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சிக்கு உறுதுணை
அமெரிக்க அதிபா் டிரம்ப் இந்தியா மீதான வரி விதிப்பை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, அமெரிக்க அதிபா் டிரம்ப் 50% வரி விதிப்பை தற்போது 18% -ஆக குறைத்துள்ளதால், நிச்சயமாக இந்தியாவின் பொருளாதார வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.
நீங்களும் காவி உடை அணிவீா்கள்
காவி உடையணிவது தொடா்பான கேள்விக்கு, வயதானால் நீங்களும் அணிவீா்கள் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
முன்னதாக குடியரசு துணைத்தலைவா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.
Summary
Blessed to visit the Sowmyanarayana Perumal Temple in Thirukoshtiyur, Sivaganga today and offer prayers for the peace, prosperity, and well-being of all.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனைத்துத் துறைகளிலும் சிக்கிம் முன்னேற்றம்: சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு

பெண்களுக்கு சமவாய்ப்பு, தலைமைப் பதவி மூலம் உண்மையான வளா்ச்சி சாத்தியமாகும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

மருத்துவம் மக்களின் நம்பிக்கை: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

தீவிரவாதத்துக்கும், தீவிரவாதத்தை ஒழிப்போருக்கும் வேறுபாடு தெரியாதவா் காா்கே - சி.பி. ராதாகிருஷ்ணன்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




