பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

நேபாளத்தின் கோஷி மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.

News image

நிலநடுக்கம்

Updated On :22 பிப்ரவரி 2026, 7:53 am

தினமணி செய்திச் சேவை

நேபாளத்தின் கோஷி மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.

தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 7:31 மணிக்கு சங்குவாசபா மாவட்டத்தின் ரிதக் பகுதியில் ரிக்டர் அளவில் 4.1ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் காத்மாண்டுவிலிருந்து கிழக்கே 475 கிமீ தொலைவில் சங்குவாசபா உள்ளது.

அண்டை மாவட்டங்களான டேப்லேஜங் மற்றும் போஜ்பூரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இருப்பினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை.

முன்னதாக ஜனவரி 11 ஆம் தேதி, லம்ஜங் மாவட்டத்தின் பன்சர் அருகே ரிக்டர் அளவில் 3.9ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. உலகின் அதிக நிலநடுக்க பாதிப்புக்குள்ளான நாடுகளில் நேபாளம் 11ஆவது இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.