தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு கையொப்பம்!

புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடர்பாக...

News image

புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு கையொப்பம்!

Updated On :23 மார்ச் 2026, 6:36 pm IST

புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இன்று(மார்ச் 23) கையொப்பமானது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணியை உறுதி செய்திருந்தாலும் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில் இன்று இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். என்றாலும், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், திமுக இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையை நிறைவு செய்து இறுதி முடிவை அறிவிக்க இந்த இரண்டு கட்சிகளும் ஆர்வம் காட்டவில்லை. இரு கட்சிகளும் இணைந்து தேர்தலைச் சந்திக்க விரும்புகின்றன. ஆனால், தொகுதிகளை விட்டுக்கொடுப்பதில்தான் பிரச்னை நீடித்தது.

இதனால், இரண்டு கட்சிகளின் தலைமையும் தலையிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் தொகுதிப் பங்கீட்டை முடிக்க உத்தரவிட்டன. இதனால், காங்கிரஸ் - திமுக இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நேற்று நள்ளிரவை கடந்தும் நீடித்தது.

இந்த நிலையில், புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு இன்று ஒப்பந்தம் கையொப்பமானது.

காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், திமுக 12 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன. விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் தலா 1 தொகுதியில் போட்டியிட உள்ளன.

தேசிய ஜனநாயகக் கூட்டணி

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்று இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் என். ஆர். காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும், பாஜகவுக்கு 14 தொகுதிகளும் என உடன்பாடு ஏற்பட்டது.

தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 14 தொகுதிகளில் பாஜக 10 தொகுதிகளிலும், அதிமுகவுக்கு 2, லட்சிய ஜனநாயகக் கட்சிக்கு 2 என்று தொகுதிகள் முடிவு செய்யப்பட்டன. இதில், 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துவிட்டது. அதிமுகவும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

Summary

The seat-sharing agreement between DMK and Congress in Puducherry was signed today (March 23).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.