டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

சிதம்பரம் கோதண்டராமர் கோயில் தேரோட்டம்!

சிதம்பரம் மேலவீதியில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமர் கோயில் தேரோட்டம் குறித்து..

News image

சிதம்பரம் கோதண்டராமர் கோயில் தேரோட்டம்

டிஎன்எஸ்

Updated On :27 மார்ச் 2026, 3:47 am

இணையதளச் செய்திப் பிரிவு

சிதம்பரம்: சிதம்பரம் மேலவீதியில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் மேலரதவீதி ஸ்ரீகோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவம் மார்ச் 19 ஆம் தேதி திருமஞ்சனத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, மார்ச் 20 ஆம் தேதி பிரம்மோற்சவ கொடியேற்றும் நடைபெற்றது.

பக்தர்களுக்கு காட்சியளிக்கும் ஸ்ரீகோதண்டராமர்

பக்தர்களுக்கு காட்சியளிக்கும் ஸ்ரீகோதண்டராமர்

இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீகோதண்டராமர் வீதியுலா நடைபெற்றது.வெள்ளிக்கிழமை காலை(மார்ச் 27) தேரோட்டம் நடைபெற்றது. மேலரதவீதி கோதண்டராமர் கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர் வடக்குரதவீதி, தெற்குரதவீதி என னான்கு மாட வீதிகளின் வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது.

இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று ராமா ராமா என கோஷமிட்டு வடம் பிடித்து தேர் இழுத்து, சுவாமியை தரிசித்தனர்.

இதனைத் தொடர்ந்து 28-ஆம் தேதி சனிக்கிழமை காலை புஷ்பயாகமும், மாலை ஸ்ரீ ஆஞ்சநேயர் உற்சவம், பட்டாபிஷேகம், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், 29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதகலச திருமஞ்சனம் நிகழ்ச்சியும், 30-ஆம் திங்கள்கிழமை தேதி விடையாத்தி திருமஞ்சனமும் நடைபெறுகிறது.

உற்சவ ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் டி.திருவேங்கடவன், ஆர்.சௌந்தரராஜன், ஜெ.சுதர்சனன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.