நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சரும வறட்சியைப் போக்கும் இயற்கையான 'ஃபேஸ் பேக்'

குளிர்காலம் என்றாலே பெரும்பாலானோருக்கு சரும வறட்சி ஒரு பெரும் பிரச்னையாக இருக்கும். அப்படி பட்டவர்களுக்கு தர்ப்பூசணி ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். 

News image

கோப்புப்படம்

Updated On :4 ஜனவரி 2022, 4:55 pm IST

குளிர்காலம் என்றாலே பெரும்பாலானோருக்கு சரும வறட்சி ஒரு பெரும் பிரச்னையாக இருக்கும். அப்படி பட்டவர்களுக்கு தர்ப்பூசணி ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். 

குளிர் காலங்களில் உடலில் நீரின் அளவு குறைவதால் சரும வறட்சி ஏற்படுகிறது. சரும வறட்சியைப் போக்க நன்றாக தண்ணீர் அருந்த வேண்டும். 

அடுத்ததாக சரும வறட்சியை சரிசெய்ய தண்ணீர் அதிகமுள்ள பழங்களை சாப்பிட வேண்டும். சாப்பிடுவது மட்டுமின்றி, சருமத்தில் பேக் போடலாம்.

அதில் தர்பூசணி உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று. தர்பூசணி சிறிதளவு எடுத்து மசித்து அப்படியே முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். அத்துடன் சிறிது பால் சேர்த்தும் சருமத்திற்கு பேக் போடலாம். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தர்பூசணியுடன் சிறிதளவு தயிர் சேர்த்தும் முகத்தில் தேய்த்து கழுவினால் முகம் ஜொலிக்கும். 

தர்பூசணி அழகைத் தந்து இளமையைத் தக்கவைக்க உதவுகிறது. சருமத்திற்கு நீரேற்றத்தை அளிப்பதால் சருமம் பொலிவாக காணப்படும். உடலுக்கு எப்படி ஊட்டச்சத்து தேவையோ அதுபோல சருமத்திற்கும் ஊட்டச்சத்துகள் தேவைப்படுகிறது.

இத்துடன் சருமத்தை அவ்வப்போது குளிர்ந்த நீரால் கழுவுவதும் சரும வறட்சியைப் போக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.