தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இன்ஸ்டாகிராம் ஒரு நரகம்; அதிலிருந்து வெளியேறுகிறேன்: ஜஸ்டின் பைபர்!

சமூக வலைத்தளம் ஒரு நரகம்! அந்த நரகத்திலிருந்து தான் பலமுறை வெளியேற முயன்றும் முடியாமல் தவித்ததாகவும், தற்போது தான் அதிலிருந்து தப்பிக்க விடிவு காலம் பிறந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

News image
Updated On :1 டிசம்பர் 2016, 9:56 am

கிராமி விருது பெற்ற பாப் பாடகர் 'ஜஸ்டின் பைபர்' சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்குவதாக அறிவித்திருக்கிறார். வெறும் அறிவிப்பு மட்டுமல்ல இன்ஸ்டாகிராம் ஒரு பிசாசு! என்று அதைச் சாடி விட்டு அதிலிருந்து வெளியேறி இருக்கிறார். மேலும் சமூக வலைத்தளம் ஒரு நரகம்! அந்த நரகத்திலிருந்து தான் பலமுறை வெளியேற முயன்றும் முடியாமல் தவித்ததாகவும், தற்போது தான் அதிலிருந்து தப்பிக்க விடிவு காலம் பிறந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

செவ்வாய் அன்று லண்டனில் ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசும் போது மீண்டும் மேற்சொன்னதையே உறுதிப்படுத்தி இருக்கிறார். நான் 90 சதம் உறுதியாகச் சொல்வேன். இந்து போன்ற சமூக வலைத்தளச் செயல்பாடுகளில் ஈடுபடும் போது நாம் நரகத்திற்குத் தான் அனுப்பப்படுகிறோம். சொல்லப் போனால் இன்ஸ்டாகிராம் சர்வரின் உள்ளே வைத்துப் பூட்டப் படுகிறோம், இப்படித் தான் நான் டிஜிட்டல் மீடியாவில் சிக்கிக் கொண்டேன். பிறகு அதிலிருந்து மீண்டு எழுந்து நான் என் வழியே செல்ல நினைத்தாலும் என்னால் முடியவில்லை. என்றும் புலம்பி இருக்கிறார்.

Story image

கடந்த ஆகஸ்டில் இன்ஸ்டாகிராமில் இருந்து தற்காலிகமாக வெளியேறிய ஜஸ்டின் இரு வாரங்களில் மீண்டும் தனது முன்னாள் காதலி செலினா கோம்ஸ்காக இன்ஸ்டாகிராம் கணக்கில் உள் நுழைந்திருக்கிறார். பிறகு என்ன நடந்ததோ? உடனடியாக தனது இன்ஸ்டாகிராம் கணக்கை முடிவுக்கு கொண்டு வந்து அங்கிருந்து வெளியேறி விட்டதாக அறிவித்திருக்கிறார்.

ஜஸ்டின் பைபருக்கும் அவரது முன்னாள் காதலி செலினா கோம்ஸுக்கும் இடையில் நடந்த இன்ஸ்டாகிராம் சண்டைக்குப் பின் தான் ஜஸ்டினின் இந்த உலகப் புகழ் பெற்ற வெளியேற்றம் நடைபெற்றதாக அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.