

பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்கான டாமிஃப்ளூ மாத்திரைகள் தயாராக உள்ளன என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறியது:-
10 லட்சம் டாமிஃப்ளூ மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 5 லட்சம் மாத்திரைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டாமிஃப்ளூ மாத்திரைகள் இருப்பில் உள்ளன. சில தனியார் மருத்துவமனை நிர்வாகங்களும் இருப்பில் வைத்துள்ளன. இது தவிர, அரசிடம் டாமிஃப்ளூ மாத்திரைகளை கேட்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.