எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

நல்ல தரமான உணவு வகைகள் நியாயமான விலையில் வேண்டுமா?

'இங்கு பலவிதமான தொழில்கள் செய்வதற்கான ஆலோசனைகள் வழங்கினாலும் உங்களால் எதை செய்தால் வெற்றிகரமாக

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:59 pm IST

'இங்கு பலவிதமான தொழில்கள் செய்வதற்கான ஆலோசனைகள் வழங்கினாலும் உங்களால் எதை செய்தால் வெற்றிகரமாக செய்ய முடியுமோ அதை செய்யுங்கள். தற்பொழுது பெரும்பாலானோர் மத்தியில் உணவு சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அதனால் நமது பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களைத் தேடிக் கொண்டே இருக்கிறோம். நல்ல தரமான உணவு வகைகள் நியாயமான விலையில் கடைகளில் கலப்படம் இல்லாமல் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று பலரும் நினைக்கின்றனர். எனவே, உணவுத் தொழில் எப்போதும் நமக்கு கை கொடுக்க கூடியது. அந்த வகையில், வீட்டில் இருந்தபடியே சில உணவு வகைகளை எப்படி தயார் செய்து விற்பனை செய்யலாம் என்பதை பார்க்கலாம்' என்கிறார் சுயதொழில் ஆலோசகர் உமாராஜ்.

சேவை: சேவை எப்படி தயார் செய்வது என்பதை. அதாவது பச்சரிசியில் செய்வது இடியாப்பம், புழுங்கல் அரிசியில் செய்வது சேவை. இதை அரிசியில் மட்டுமல்லாமல் கோதுமை, கேழ்வரகு மற்றும் சிறுதானியத்திலும் செய்ய முடியும். இதை செய்வதும் எளிது. புழுங்கல் அரிசியை ஊற வைத்து பின் அரைத்து அதை இட்லி போல் வேக விட்டு பின்னர் அதை இடியாப்ப அச்சிலிட்டு பிழிய வேண்டும். பெரிய அளவில் இதைச் செய்ய இதற்கான இயந்திரங்கள் உண்டு. உங்களால் ரூ. 70,000 முதலீடு செய்ய முடிந்தால் அல்லது வங்கியில் கடன் பெற முடியும் என்றால், வீட்டில் 10க்கு 10 இடம் இருந்தாலே போதும். இதை எளிதாக செய்யலாம். இதற்கு வீட்டு உபயோகத்தில் இருக்கும் மின்சாரம் போதுமானது. என்னால் இவ்வளவு முதலீடு செய்ய இயலாது என்றால் இதனை செய்பவர்களிடமிருந்து மொத்தமாக வாங்கி அதை விதவிதமாக தயார் செய்யலாம். அதாவது அதை எலுமிச்சை சேவை, தேங்காய் சேவை, வெஜிடபிள் சேவை மற்றும் மஸ்ரூம் சேவை என பலவிதமாக தயார் செய்து விற்பனை செய்யலாம். சின்ன சின்ன கம்பெனிகள் நிறைய உள்ள இடங்களில் ஆர்டர் எடுத்து சப்ளை செய்யலாம். இதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

பாப்கார்ன்: நீங்கள் இருக்கும் பகுதி, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி எனில், உங்களால் ரூ. 12,000 முதலீடு செய்ய முடியும் என்றால் பாப்கார்ன் செய்யும் மிஷின் வாங்கி இதனை தயாரிக்கலாம். மேலும், மிஷின் வாங்கும் போது அதனை எப்படி உபயோகப்படுத்துவது என கற்றும் தருவார்கள். பாப்கார்னில் தற்போது நிறைய வகைகள் இருக்கிறது. அதனை அவர்களே சப்ளையும் செய்கிறார்கள். நீங்கள் சில்லறை வியாபாரிகளுக்கு மொத்த விலையில் கொடுக்கலாம்.

சப்பாத்தி: திருமண விசேஷங்கள், ஓட்டல்கள் மற்றும் சிறிய விசேஷங்களுக்கு சப்பாத்தி செய்வது எளிதல்ல. அதிகளவில் சப்பாத்தி செய்வதற்கு இயந்திரம் உள்ளது. சில மிஷின்கள் மாவை பிசைந்து, பின் அதை உருண்டையாக்கி, பின் அதுவே வட்ட வடிவமாக செய்து தரும். இதில் கால்வாசி வெந்துவிடும். பிறகு அதை ரெடிமேட் சப்பாத்தியாக விற்பனை செய்யலாம். இது தற்போது சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கிறது. இதை வாங்கி சப்பாத்தி கல்லில் போட்டு சுட்டு எடுத்தால் சப்பாத்தி ரெடி. இன்னொரு இயந்திரம் உள்ளது அதில் மாவை போட்டால், பிசைந்து , உருட்டி, திரட்டி சப்பாத்தியாக கொடுத்துவிடும். இது விலை சற்று அதிகம். குறைந்த நேரத்தில் நூற்றுக்கணக்கான சப்பாத்திகளை செய்யக் கூடியது. ஆக உங்களால் ரூ.1 லட்சம் முதல் 2.50 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும் என்றால், வீட்டில் இடவசதி உள்ளது என்றால் சப்பாத்தி செய்யும் தொழிலை செய்யலாம். கேட்டரிங் செய்பவர்கள், ஓட்டல் நடத்துவோரிடம் ஆர்டர் பிடித்து செய்ய நல்ல லாபம் கிடைக்கும். இது போன்ற இயந்திரங்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் கிடைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.