பிரபல இசைக் கலைஞர் ஸ்ரீமதி அருணா சாய்ராம் சென்னை மியூசிக் அகாடமியின் நடப்பாண்டுக்கான சங்கீத கலாநிதி விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கர்னாடக இசையைப் பல ஆண்டுகளாக வெளி நாடுகளில் பரப்பி அனேக ரசிகர்களைப் பெற்றவர் என்ற பெருமை அருணா சாய்ராமுக்கு உண்டு. இவர், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு இசைக் கலைஞர்களுடன் ஒருங்கிணைந்து பல நிகழ்ச்சிகளை நடத்தியவர். இந்த ஆண்டு டிசம்பர் 15 முதல் 2019-ம் ஆண்டு ஜனவரி 1 வரை நடைபெறும் மியூசிக் அகாடமியின் 92-வது ஆண்டு மாநாட்டுக்கு, அருணா சாய்ராம் தலைமை வகிப்பார்.