தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் இதையெல்லாம் செய்யாதீங்க!

கோடையில் வெப்பமான கதிர்களும், சூடான காற்றும் நம்மை பாடாய்ப்படுத்தி விடும். அதனை சமாளிக்க சில எளிய வழிகள்:

News image
Updated On :4 மே 2018, 1:09 pm IST

கோடையில் வெப்பமான கதிர்களும், சூடான காற்றும் நம்மை பாடாய்ப்படுத்தி விடும். அதனை சமாளிக்க சில எளிய வழிகள்:

இறுக்கமான ஆடைகள்

இறுக்கமான ஆடைகள் நம்மை பல்வேறு விதங்களில் தொல்லைப்படுத்துகின்றன. இறுக்கமாக உடைகளை அணிவதால் மேலும், நாம் கோடையின் வெம்மையைக் கூட்டுகிறோம். கோடையில் இப்படி ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். இறுக்கமான பேண்ட், உள்ளாடைகள், பாவாடைகள் போன்றவை காற்றோட்டத்தை முழுவதுமாக தடை செய்துவிடும். அதிமாக வியர்க்கும், இதனால் வியர்வையானது எளிதில் ஆவியாக முடியாமல் போய்விடுவதால் உடலில் உப்பு படிந்து, அரிப்பு ஏற்படும். இது மட்டுமின்றி கோடைக்காலத்தில் ஜீன்ஸ் போன்ற உடைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இவ்வகை ஆடைகளால் இறுக்கம், வியர்வைத் தேக்கம், அரிப்பு, தோல் நோய்கள் ஏற்படுகிறது.

செயற்கை இழை ஆடைகள்

தற்போது பாலியஸ்டர் போன்ற ஆடைகள் நிறைய வந்து விட்டன. வெயில் காலத்தில் இவ்வாடைகள் நமது உடலுக்கு ஏற்றவைகள் அல்ல. இவ்வகை ஆடைகள் எளிதில் சூடாவதுடன் நமது உடம்பின் மேல் தோலையும் எளிதில் சூடாக்கிவிடுகின்றன. இதனால் தோலின் நிறம் மாறுவது மட்டுமின்றி தோல் அலர்ஜியும் ஏற்படுகின்றன.

தளர்வான ஆடையே சிறந்தது

கோடைக்காலத்தில் தளர்வான ஆடையையே அணியுங்கள். தளர்வான ஆடைகள் உடம்பை இறுக்கி பிடிக்காது. இதனால் உடம்புக்கு காற்றோட்டம் எளிதில் கிடைக்கிறது எனவே கோடைவெம்மை குறைகிறது.

கெட்டியான நிற ஆடைகள்

கோடையில் நாம் அணியும் ஆடைகளின் நிறத்தை கவனித்தல் அவசியமாகும். காரணம் சிவப்பு, கருப்பு மற்றும் கெட்டியான பச்சை போன்ற நிறங்கள் கோடையில் மேலும் வெம்மையைக் கூட்டுகின்றன. இந்நிறங்கள் சூரிய ஒளியின் உக்கிரத்தைக் கூட்டி விடுகின்றன. இந்நிறங்கள் கண்களை அதிகமாக உறுத்துகின்றன. அதிக ஒளியில் கண்களை உறுத்துவதால் கண் தசைகள் எளிதில் களைப்படையும். இது போன்று பெரிய டிசைன் போட்ட ஆடைகளையும் தவிர்ப்பது நல்லது. எனவே, கோடையில் வெளிர்நிற ஆடைகளையும், சிறிய டிசைன் போட்ட உடைகளையும் அணிதல் நல்லது.

ஆபரணங்கள்

கோடைக்காலத்தில் ஆபரணங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். அதிக ஆபரணங்கள் மற்றும் ஆபரணங்களை நெருக்கமாக அணிவதால் வியர்வை ஆவியாகாமல் அரிப்பு ஏற்பட்டு தோல் நோய்கள் வர ஏதுவாகிவிடும். எனவே, கோடைக்காலத்தில் எளிமையான நகைகள் அணியுங்கள்.

கைப்பைகள், செருப்புகள்

வெளியே போகும்போது பெரிய கைப்பைகள் பயன்படுத்த வேண்டாம். பெரிய கைப்பைகள் அசௌகரியத்தை தருவது மட்டுமின்றி காற்றோட்டத்தையும் தடுக்கும். கெட்டியான கண்களை உறுத்தும் நிறங்களை கொண்ட கைப்பைகளை தவிர்த்தல் நல்லது. அது போல கோடையில் பிளாஸ்டிக் செருப்புகளை தவிர்த்தல் நல்லது. பிளாஸ்டிக் செருப்புகள் வெயிலில் விரைவாக சூடாகிவிடும். இதனால் கால் பாதங்கள் சூடாகி தோலின் மென்மை பாதிக்கப்படும் எனவே, தோல், ரப்பர், செருப்புகளை பயன்படுத்துதல் சிறந்ததாகும்.

குழந்தைகளுக்கான ஆடைகள்

குழந்தைகளின் ஆடை விஷயத்தில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். குழந்தைகளுக்கு வெண்ணிற துணிகளையும், வெள்ளை ஆடைகளையும் பயன்படுத்துதல் குழந்தைகளின் மென்மையான தோலுக்கு சிறந்ததாகும். தளர்வான உடைகள் மற்றும் பருத்தியிலான சாக்ஸ், கையுறைகளை பயன்படுத்துதல் மிக நல்லதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.