கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சதா சர்வ காலமும் ஸ்மார்ட்ஃபோனும் கையுமாக இருக்கிறீர்களா? இது உங்களுக்கான எச்சரிக்கை ரிப்போர்ட்!

ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தும் பெரும்பாலான இளைஞர்கள் சதா சர்வகாலமும் அதிலே லயித்துக் கிடக்கிறார்கள்.

News image
Updated On :24 அக்டோபர் 2018, 12:28 pm

சினேகா

ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தும் பெரும்பாலான இளைஞர்கள் சதா சர்வகாலமும் அதிலே லயித்துக் கிடக்கிறார்கள். இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகள், பெரியவர்கள் என பலரும் இதற்கு அடிமையாகிக் கிடப்பதைப் பார்க்கிறோம். உண்ணும் போதும் உறங்கும் போதும் கூட இந்த ஃபோனுடன் தான் பொழுதுகள் கழிகின்றன. இது எத்தகைய ஆபத்துக்களை வரவழைக்கும் என்று தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் அந்தத் தவறுகளைத் திரும்பத் திரும்பச் செய்கின்றனர். தேவையான சமயங்களில் மட்டும் போனில் பேசிவிட்டு அல்லது பயன்படுத்திவிட்டு அதைத் தூர வைப்பது உடல் மற்றும் மனதுக்கு நல்லது. அண்மையில் வெளிவந்த இந்த செய்தியைப் படித்தாலாவது அலைபேசியை சற்று அணைத்து வைக்கிறோமா என்று பார்க்கலாம்.

ஒரு வாரமாக ஓய்வின்றி தொடர்ந்து ஸ்மார்ட்போன் உபயோகித்து வந்த பெண்மணி, திடீரென விரல்களை மடக்க முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் ஃபோன்களை மிக அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைக்கு உதாரணமாக சீனாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சீனாவில் சங்ஷா என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே தனது ஸ்மார்ட்ஃபோனில் மூழ்கியிருந்துள்ளார். உறங்கும் நேரத்தைத் தவிர மற்ற சமயங்கள் முழுவதும் போனும் கையுமாக கிட்டத்தட்ட ஒரு வாரம் இருந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக அவருக்கு வலது கையில் தாங்க முடியாத அளவிற்கு வலியெடுத்துள்ளது. கைவிரல்கள் அதிக வலி எடுத்தது மட்டுமல்லாமல் இயங்கவும் இல்லை. பதறியடித்து மருத்துவமனைக்குச் சென்றவருக்கு அதைவிட அதிர்ச்சி காத்திருந்தது. 'டெனோசினோவிடிஸ்' என்ற நரம்பியல் நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததை பரிசோதித்து கண்டறிந்தனர். தொடர் சிகிச்சைக்குப் பிறகே மருத்துவர்களின் அதீத கவனிப்பில் அந்தப் பெண்மணிக்கு மீண்டும் விரல்கள் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளது. முக்கியமாக இனி இந்தப் பிரச்னை மறுபடியும் வராமல் இருக்க வேண்டுமெனில் ஸ்மார்ட்போனை தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்த கூறியுள்ளனர்.

உலகம் முழுவதும் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அடிமையாவோர் எண்ணிக்கை அதி விரைவாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதே வேளையில் அவர்களுக்கு நோய்களும் பிரச்னைகளும் கண்ணுக்குத் தெரியாமல் உருவாகி வருகிறது. சீனப் பெண்மணிக்கு நேர்ந்தது போல் நீண்ட நேர செல்ஃபோன் பயன்பாட்டால் கை விரல் பாதிப்பு யாருக்கு வேண்டும்னாலும் வரலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.