கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

'சிறிய அளவிலான வகுப்பறைகள் மாணவர்களின் செயல்திறனைப் பாதிக்கும்'

சிறிய அளவிலான வகுப்பறைகள் எப்போதும் மாணவர்களுக்கு சிறந்த செயல்திறன் மற்றும் சாதனைகளுக்கு வழிவகுக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

News image
nk_13_school_1312chn_122_8
Updated On :31 ஜனவரி 2024, 1:35 pm

IANS

சிறிய அளவிலான வகுப்பறைகள் மாணவர்களின் சிறந்த செயல்திறன் மற்றும் சாதனைகளுக்கு வழிவகுக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

அமெரிக்காவின் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மாணவர்களிடையே ஒரு ஆய்வை மேற்கொண்டனர். 

வழக்கமாக பாடங்கள், வகுப்புகளைப் பொறுத்து ஒவ்வொரு நாடுகளிலும் வகுப்பறைகளின் அளவுகள் வேறுபடுகிறது. மேலும், சிறிய வகுப்பறைகள் இருக்கும்பட்சத்தில் ஆசிரியர்கள் மாணவர்களை எளிதாக கையாள முடியும். இதனால் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் தேர்வு செய்யப்படுகின்றன. ஆனால், பள்ளிகளில் சிறிய அளவிலான வகுப்பறைகளை மாணவர்கள் விரும்புவதில்லை என்று ஆய்வு தெரிவிக்கிறது.

1995 முதல் ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும், கணிதம் மற்றும் அறிவியலில் சுமார் 50 நாடுகளைச் சேர்ந்த நான்காம் வகுப்பு (வயது 9-10) மற்றும் எட்டாம் வகுப்பு (வயது 13-14) மாணவர்களின் செயல்திறன் மற்றும் சாதனைகள் கண்காணிக்கப்பட்டது. 

இதில், கடந்த 2003, 2007 மற்றும் 2011-இல் சேகரிக்கப்பட்ட நான்கு ஐரோப்பிய நாடுகளான ஹங்கேரி, லித்துவேனியா, ருமேனியா மற்றும் ஸ்லோவேனியாவின் எட்டாம் வகுப்பு மாணவர்களின் தரவுகள் பயன்படுத்தப்பட்டன. இந்த நான்கு நாடுகளிலும் மிகப்பெரிய அளவிலான வகுப்புகள் இருந்தன. மொத்தம் 151 பள்ளிகளில் 231 வகுப்புகளில் இருந்து 4,277 மாணவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். கணிதம், இயற்பியல், உயிரியல், வேதியியல் மற்றும் புவி அறிவியல் ஆகிய பாடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இறுதியில் சிறிய அளவிலான வகுப்பறைகள் மாணவர்களிடையே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. சிறிய அளவிலான வகுப்பறைகள் மாணவர்களின் செயல்திறனை பாதிக்கின்றன. அதே நேரத்தில் மிகப்பெரிய விலாசமான வகுப்பறைகளில் பயிலும் மாணவர்கள் எளிதாக கற்றுக்கொள்வதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.