செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

ஏப்ரல் மாசத்துக்கும் யூடியூபுக்கும் என்ன சம்பந்தம்னா கேட்கறீங்க? வரலாறு முக்கியம் பாஸ்!

2025 ஆம் ஆண்டுக்குள் 30 வயதுக்குட்பட்டோரில் பலர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கெனத் தனியான கேபிள், டிடிஹெச் போன்ற இணைப்புகளையெல்லாம் வைத்துக் கொள்ளவே போவதில்லை எல்லாம் யூ டியூபே கதி என்றாகப் போகிறது.

News image
Updated On :27 ஏப்ரல் 2019, 4:39 pm IST

யூ டியூபை நிறுவியர்கள் மூவர். சாட் ஹர்லி, ஸ்டேவ் சென், ஜாவத் கரீம் எனும் மூன்று நண்பர்களும் பே பால் நிறுவனத்தில் முன்னாள் ஊழியர்கள். இவர்களில் கரீமைத் தவிர மற்ற இருவரும் ஒரு விருந்துக்குச் செல்கிறார்கள். சென்ற விவரத்தைக் கரீமிடம் பிறகு வந்து தெரிவிக்கிறார்கள். ஆனால், அதை கரீம் நம்பவில்லை. கரீமை நம்ப வைப்பதற்காக அந்த விருந்து நிகழ்வில் தாங்கள் இருந்த போது எடுத்த விடியோ பதிவை கரீமுக்கு அனுப்ப அவர்கள் முயல்கிறார்கள். அப்போது இ மெயில்களில் விடியோ இணைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு காரணமாக குறிப்பிட்ட அந்த விடியோ பதிவை அவர்களால் கரீமுக்கு அனுப்ப முடியாமலாகிறது. இது தான் யூ டியூப் உருவானதற்கான ஆரம்பப் பொறி.

இதையடுத்து 2004, ஜனவரி 1 ஆம் தேதி சூப்பர் பவுல் என்றொரு லைவ் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் மைக்கேல் ஜாக்ஸனின் தங்கை ஜேனட் ஜாக்ஸனின் ஆடை விலகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகத்தினர் அந்தச் சம்பவத்தின் உண்மைத் தன்மையை அறிய விரும்பி அதற்கான விடியோ பதிவைத் தேடுகையில் அதுவும் அப்போது கிடைக்கவில்லை.

அதே போல 2004 ஆம் ஆண்டு சுனாமி விடியோ பதிவுகளைத் தேடும் போது அந்த விடியோ பதிவுகளும் மிஸ்ஸிங். இந்தக் காரணங்களையெல்லாம் முன் வைத்து முதன்முதலாக விடியோ பதிவுகளுக்கான ஒரு லைப்ரரி போலத்தான் யூ டியூப் தொடங்கப்பட்டுள்ளது. 

Story image

யூ டியூபை நிறுவியவர்களில் ஒருவரான ஜாவத் கரீம், தன் பள்ளித்தோழன் ஒருவனை ஒரு ஜூவில் வைத்து பதிவு செய்த 19 நொடி ஒளிப்படத்தை ‘ஜூவில் நான்’ என்ற தலைப்பில் யூ டியூபில் பதிவேற்றினார். இது தான் உலகின் முதல் யூ டியூப் பதிவாகக் கருதப்படுகிறது.

முதலில் நட்பை வளர்க்கும் டேட்டிங் அண்ட் சாட்டிங் தளங்களை முன்மாதிரியாகக் கொண்டு யூ டியூப் தளம் தொடங்கப்பட்டாலும் 2005 ஃபிப்ரவரி 14 அன்று யூ டியூப்.காம் என்ற முகவரி பதிவு செய்யப்பட்டது.

இதைத் தற்போது 130 கோடிப்பேர் பயன்படுத்துகிறார்களாம். ஒவ்வொரு நிமிடத்திற்கும் 300 மணி நேர ஒளிப்படங்கள் பதிவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறனவாம். ஒவ்வொரு நாளும் 3 கோடிப்பேர் வருகை தந்து 500 கோடி ஒளிப்படங்களைப் பார்வையிட்டுச் செல்கிறார்கள் என்கிறது கூகுள் சர்வே.

இன்றெல்லாம் ஜியோ டிவி என்ற பெயரில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை லைவ்வாக யூடியூபில் பார்க்கும் பழக்கமும் மக்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், 2025 ஆம் ஆண்டுக்குள் 30 வயதுக்குட்பட்டோரில் பலர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கெனத் தனியான கேபிள், டிடிஹெச் போன்ற இணைப்புகளையெல்லாம் எதிர்காலத்தில் வைத்துக் கொள்ளவே போவதில்லை என்று கூட ஒரு கணிப்பு சொல்கிறது. தற்போது உலகின் இரண்டாவது மிகப்பெரிய தேடுபொறியாக யூ டியூப் மாறியுள்ளது.

Related Article

‘தாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம்’ வெளிவந்திருக்கிறது அதிரிபுதிரி ஆய்வு முடிவு!

நுகர்வோர் மன்றத்தில் பாட்டா நிறுவனத்துக்கு விழுந்த ‘பாட்டா’ அடி!

இன்ஸ்டாகிராம் லைக்ஸ், கமெண்ட்ஸ்க்காக இப்படியா உயிரைப் பணயம் வைத்து ஃபோட்டோ எடுப்பது?!

பிலிப்பைன்ஸ் அகழ்வாராய்ச்சியில் 50,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய மனித குலப் படிமங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.