

இலவசமாக குடிநீர் வழங்கியதற்காக மெக் டொனால்டு ஊழியரை வாடிக்கையாளர் ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மெக் டொனால்டு கடையில் வாடிக்கையாளர் ஒருவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது, இணையதளத்தில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக, பண ரசீது கொடுக்க முடியாது என்பதற்காக 35 சென்ட்ஸ் மதிப்புள்ள தண்ணீரை வாடிக்கையாளருக்கு இலவசமாக வழங்கியுள்ளார் காசாளர்.
இருப்பினும் வாடிக்கையாளர் 100 டாலர் கொடுக்க முன்வந்துள்ளார். காசாளர் தொடர்ந்து அதனை வாங்க மறுக்கவே, கோபமுற்ற வாடிக்கையாளர் காசாளரின் முகத்தில் தாக்கியுள்ளார். இதனைத் தடுக்க வந்த மற்றொரு பெண் ஊழியரும் வாடிக்கையாளரால் தாக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, அங்கிருந்த ஜாடியை எடுத்து காசாளர் மீது வீசியுள்ளார். அதிர்ஷ்டவசமாக இதில் ஊழியர்கள் உயிர் தப்பினர்.
வாடிக்கையாளர் தாக்கியதில் சற்று படுகாயமுற்ற காசாளர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்பின்னர், போலீஸார் வந்து அந்த வாடிக்கையாளரை அழைத்துச் சென்றனர். அவரிடம் போதைப்பொருள் இருந்ததாக போலீஸார் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.