கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முதுமையிலும் அறிவாற்றல் அதிகரிக்க வேண்டுமா?

வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்புகளை சாப்பிட்டால் அறிவாற்றல் பெருகும் என ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2020, 5:37 am

DIN


வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்புகளை சாப்பிட்டால் அறிவாற்றல் பெருகும் என ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷன் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில், வால்நட் எனும் அக்ரூட் பருப்புகளை சாப்பிட்டு வந்தால் முதுமையிலும் அறிவாற்றல் நன்றாக இருக்கும் என்று ஆராய்ச்சி முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லோமா லிண்டா மற்றும் ஸ்பெயினின் கேடலோனியா, பார்சிலோனா பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். நடுத்தர வயதுடைய மற்றும்  வயதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வால்நட் சாப்பிடுவது உடல்ரீதியாக பல்வேறு மாற்றத்தை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது.

வயதானவர்கள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக தினமும் சிறிது வால்நட் எடுத்துக்கொண்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர்களது அறிவாற்றல், நினைவுத்திறன் அதிகரித்திருந்தது. அதேபோன்று, நடுத்தர வயதுடையவர்கள் தினமும் உணவில் வால்நட் எடுத்துக்கொள்ளும்பட்சத்தில், பிற்காலத்தில் அதிக நினைவுத்திறன் கொண்டிருந்தனர்.

இதில் குறிப்பிடத்தக்க தகவல் என்னவென்றால், புகைப்பிடிப்பது, மது அருந்துவது,  நரம்பியல் பிரச்னை உள்ளவர்களிடம் குறைவான மாற்றமே தெரிந்தது. அவர்கள் மற்றவர்களை விட குறைவான நினைவுத்திறனையே கொண்டிருந்தனர்.

'இது ஒரு சிறிய மாற்றம்தான். வால்நட் குறித்து தொடர்ச்சியாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறோம். அதே நேரத்தில் இந்த ஆய்வு முடிவுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டவை. முக்கியமாக, உடல் ஆரோக்கியத்தில் இதுவரை கவனம் செலுத்தாதவர்கள், தற்போது உடல்ரீதியாக பிரச்னை உள்ளவர்கள் தொடர்ந்து வால்நட் எடுத்துக்கொண்டால் குறுகிய காலத்திலே அதிகளவு மாற்றத்தை உணர முடியும்' என்று அமெரிக்காவின் லோமா லிண்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜோன் சபேட் கூறினார்.

அக்ரூட் பருப்புகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. அவை 'ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்' எனப்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும்,, வீக்கத்தையும் எதிர்க்கும் திறன் கொண்டுள்ளன. உடலில் அனைத்து செயல்பாடுகளையும் சமநிலையில் வைக்க உதவுகின்றன. 

மேலும், அக்ரூட் பருப்புகள் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் திறன் கொண்டதால் பல்வேறு நோய்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. 

முன்னதாக, வால்நட் சாப்பிட்டு வந்தால் இதயம் தொடர்பான நோய்களின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்று மற்றொரு ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.