ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கணினியை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும், ஆனால் கண் பாதிக்கக் கூடாதா?

தற்போது செல்லிடப்பேசி, கணினி, மடிக்கணினி ஆகியவை நம் வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்டன. நமது நாளின் பெரும் பகுதியில் கணினி அல்லது மடிக்கணினி முன்புதான் அமர்ந்திருக்கிறோம். 

News image

கணினியை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும், ஆனால் கண் பாதிக்கக் கூடாதா?

Updated On :6 ஜூலை 2022, 12:20 pm

DIN


தற்போது செல்லிடப்பேசி, கணினி, மடிக்கணினி ஆகியவை நம் வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்டன. நமது நாளின் பெரும் பகுதியில் கணினி அல்லது மடிக்கணினி முன்புதான் அமர்ந்திருக்கிறோம். 

இது ஒருபுறமிருக்க, பலரும் தங்களது கைப்பேசிக்கு அடிமையாகிவிட்டிருக்கிறார்கள். பணி தவிர்த்து பொழுதுபோக்குக்காக பலரும் நம்பியிருப்பது இந்த கைப்பேசியைத்தான். 

இவையெல்லாம் நமது நேரத்தைக் குடித்துவிடுவது மட்டுமல்லாமல், கண் நலத்தையும் குழிதோண்டி புதைத்துவிடுகிறது.

கணினி, கைப்பேசி என எதுவாக இருந்தாலும், நமது கண்களின் பார்வைத் திறனை மட்டும் குறைக்கவில்லை, கூடவே, இதர பல பிரச்னைகளையும் கொண்டு வந்து கொடுக்கிறது. அவை, தெளிவற்ற பார்வை, கண் வறட்சி, கண் எரிச்சல் போன்றவற்றுடன் தலைவலி மற்றும் கழுத்து வலிகளும் கொசுறாகக் கிடைக்கின்றன.

இதுபோன்று தொடர்ந்து கணினித் திரைகளைப் பார்த்துக் கொண்டே இருப்பவர்கள், இருந்தாக வேண்டியவர்கள், அடிக்கடி கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். திரையைத் தவிர்த்து வேறு எங்கிலும் பார்வையைத் திருப்ப வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கண்களை அடிக்கடி சிமிட்டி, கண் வறட்சியைப் போக்க வேண்டும்.

சிலருக்கு ஏதேனும் பிரச்னைகள் தொடங்கியிருந்தால், உடனடியாக கண் மருத்துவரை நாடி சிகிச்சையை தொடங்குதல் நலம். கண் வறட்சியை உணர்ந்தால், மருத்துவரின் ஆலோசனையின்பேரில் கண் சொட்டு மருந்துகளைக் கூட பயன்படுத்தலாம்.

எந்த பிரச்னையும் இல்லை, ஆனால் வந்துவிடுமோ என்று அஞ்சுபவர்கள், 6 மாதம் அல்லது ஒரு ஆண்டு இடைவெளியில் கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.