அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

செலவே இல்லாமல் வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்! எப்படி?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முக அழகுக்காக ஃபேஷியல் செய்கின்றனர். இதற்காக பார்லரில் ஆயிரக்கணக்கில் வசூல் செய்கின்றனர். 

News image
Updated On :5 நவம்பர் 2022, 2:07 pm IST

இன்றைய இளம் பெண்கள் மட்டுமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முக அழகுக்காக ஃபேஷியல் செய்கின்றனர். இதற்காக பார்லரில் ஆயிரக்கணக்கில் வசூல் செய்கின்றனர். 

பார்லரில் பெரும்பாலாக முகத்தை க்ளீன்ஸிங் செய்ய ரசாயனம் அடங்கிய பொருள்கள்தான் பயன்படுத்துகின்றனர். இது சிலருக்கு ஒத்துக்கொள்வதும் இல்லை. 

இதற்கு மாற்றாக நீங்கள் செலவே இல்லாமல் வீட்டிலேயே பேஷியல் செய்யலாம். 

செய்ய வேண்டிய முறை: 

1. முதலில் முகத்தை ஐஸ்கட்டி கொண்டு நன்றாகக் மசாஜ் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது கீழிருந்து மேல் நோக்கி 10 நிமிடங்கள் செய்ய வேண்டும். இது முகத்தில் உள்ள துளைகளைக் குறைக்கும். 

2. பின்னர் கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து அத்துடன் சிறிது பால் சேர்த்து அந்தக் கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்து சில நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவ வேண்டும். கடலை மாவு முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும், பால் கரும்புள்ளிகளை அகற்றும். 

Story image

3. பார்லரில் டீ- டேன் என்று சொல்வார்கள். அதை வீட்டிலேயே செய்யலாம். நன்கு சூடான நீரில் ஆவி பிடிக்க வேண்டும். அவ்வளவுதான்! 5 நிமிடங்கள் ஆவி பிடித்தால் போதுமானது. முடிந்தால் துளசி, புதினா இலை என ஏதேனும் ஒரு நறுமணப் பொருளைப் போட்டு ஆவி பிடிக்கலாம். 

4. அடுத்து ஸ்க்ரப் கலவையை தயார் செய்ய வேண்டும். காபி பவுடர் 3 டீஸ்பூன், கெட்டித் தயிர் அரை ஸ்பூன் சேர்த்து கலந்து முகத்தில் ஸ்க்ரப் செய்ய வேண்டும். இது முகத்தில் இறந்த செல்களை அழிக்கும். 

5. அடுத்து பேஷியலுக்கு ஆரஞ்சு தோலை பவுடர் செய்து அத்துடன் சந்தன பவுடர், சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் விட்டுவிட வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவலாம். இது முகத்தில் உள்ள தேவையற்ற மருக்களை நீக்கி முகத்தைப் பொலிவாக்கும். 

6. இறுதியாக ஏதேனும் ஒரு மாய்சரைசரை பயன்படுத்த வேண்டும். கற்றாழை ஜெல்லுடன் வைட்டமின் இ ஆயில் சேர்த்து பயன்படுத்தலாம். இல்லையெனில் உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு ஏதேனும் ஒரு மாய்சரைசரை பயன்படுத்தலாம். 

அப்புறம் என்ன! இனி பார்லருக்கு போகத் தேவையில்லை..! வீட்டிலேயே பேஷியல் செய்யுங்கள்..! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.