தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

தீராத தலைவலியா? இயற்கையாக சரிசெய்ய 5 எளிய வழிகள்!

தலைவலி....பலருக்கும் பல நேரங்களில் இருக்கும் ஒரு பிரச்னை. தலைவலி வந்தாலே எரிச்சல் அதிகம் இருக்கும். ஏனெனில், எந்த வேலையையும் இந்த தலைவலி செய்யவிடாது.

News image
Updated On :4 அக்டோபர் 2022, 4:35 pm IST

தலைவலி....பலருக்கும் பல நேரங்களில் இருக்கும் ஒரு பிரச்னை. தலைவலி வந்தாலே எரிச்சல் அதிகம் இருக்கும். ஏனெனில், எந்த வேலையையும் இந்த தலைவலி செய்யவிடாது. இதனால் தலைவலியைப் போக்க உடனடியாக ஒரு மாத்திரையை விழுங்குவதுதான் பலரும் முயற்சிக்கும் ஒரு தீர்வாக இருக்கிறது. 

ஆனால், தலைவலிக்கு மாத்திரைகளை எடுத்துக்கொள்வது மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர்களே எச்சரிக்கின்றனர். அவ்வாறு மாத்திரைகளை எடுத்துக்கொள்வது சிறுநீரகம், இதய பிரச்னைகளை ஏற்படுத்தும். 

சரி, தலைவலியைப் போக்க என்ன செய்யலாம்? 

1. தண்ணீர் குடித்தல்

தலைவலி வந்தால் நீங்கள் முதலில் செய்ய வேண்டிய விஷயம் நிறைய தண்ணீர் குடிப்பது. உடலில் நீர்ச்சத்து குறைவதாலும் தலைவலி ஏற்படும். முடிந்தால், உங்கள் உடல் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் பெற தண்ணீரில் சிறிது உப்பு கலந்து குடிக்கலாம். பதிலாக, எலக்ட்ரோலைட் பானம் அருந்தலாம். 

2. அமர்ந்திருக்கும் முறை 

நேராக நிமிர்ந்து உட்காராவிட்டாலும் தலைவலி வரலாம். உதாரணமாக, குனிந்து மொபைலைப் பார்க்கும்போது கழுத்து மற்றும் முதுகின் மேல் பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனாலும் தலைவலி ஏற்படலாம். எனவே, அவ்வப்போது தலையை அசைக்க வேண்டும். அப்பகுதியில் மசாஜ் செய்யலாம். 

3. காற்று 

காற்று குறைவான(ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு குறைவான) இடத்தில் இருந்தாலும் தலைவலி வரும். எனவே, ஜன்னலைத் திறந்து வைப்பதுடன் காற்றோட்டமான அறையில் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். 

4. வெளிச்சம் 

கண்களுக்கு கூசக்கூடிய அல்லது அதிக ஒளி கொண்ட விளக்குகளை அகற்றி விடுங்கள். குறிப்பாக எல்இடி விளக்குகள் கண்களுக்கு பிரச்னை ஏற்படுத்தக்கூடியவை. இது தலைவலியை உண்டுபண்ணும். 

5. வெளியே செல்லுங்கள்

நீங்கள் எந்த வேலை செய்தாலும் ஓய்வு எடுக்க வெளியில் செல்வது உங்கள் உடலுக்கும் மனதுக்கும் நல்லது. காற்று, சூரிய ஒளி..என இயற்கை உங்கள் மனநிலையை மேம்படுத்தும். ஏனெனில், மன அழுத்தத்தினால்தான் பெரும்பாலும் தலைவலி வருகிறது.

நாள்பட்ட தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி இருந்தால் மருத்துவரை அணுகுவது கட்டாயம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.