ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

நம்பிக்கையும் உண்மையும்: காய்ச்சலுக்கு நோய் எதிர்ப்பு மருந்து உட்கொள்வது சரிதானா?

சாதாரணமாக காய்ச்சல், இருமல், வயிற்றுப்போக்கு என உடல்நிலை சரியில்லை என்றால் பலரும் நேரடியாக மருந்துக் கடைகளுக்குச் சென்று மருத்துவர்களின் பரிந்துரையின்றி மருந்துகளை வாங்கி உட்கொள்வர். இது சரியானதுதானா?

News image
Updated On :26 ஜூலை 2023, 2:23 pm IST

சாதாரணமாக காய்ச்சல், இருமல், வயிற்றுப்போக்கு என உடல்நிலை சரியில்லை என்றால் பலரும் நேரடியாக மருந்துக் கடைகளுக்குச் சென்று மருத்துவர்களின் பரிந்துரையின்றி மருந்துகளை வாங்கி உட்கொள்வர். இது சரியானதுதானா?

வைரஸ் தொற்றுகளுக்கு நோயெதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்வது பயன் தருமா?

நோயெதிர்ப்பு மருந்துகள் குறித்த தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் இரைப்பை குடலியல் நிபுணர் டாக்டர்  ஜெயதேவன். 

வைரஸ் காய்ச்சலுக்கு நோயெதிர்ப்பு மருந்துகள்(antibiotics) பயனுள்ளதாக இருக்கும். 

பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுகளுக்கு எதிராக மட்டுமே நோயெதிர்ப்பு மருந்துகள் செயல்படும். வைரஸ்களுக்கு எதிராக அவை எந்த பயனையும் அளிக்காது. பெரும்பாலான காய்ச்சல்கள் வைரஸால் ஏற்படுபவை, அவற்றுக்கு நோயெதிர்ப்பு மருந்துகள் தேவையில்லை. டெங்கு, ப்ளூ காய்ச்சல், கரோனா எல்லாமே வைரஸால் ஏற்படும் தொற்றுகள். பாக்டீரியாக்களினால் பரவக்கூடிய தொற்றுகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்தலாம். 

நோயெதிர்ப்பு மருந்துகளை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். 

வளர்ந்த நாடுகளில் அதிகாரபூர்வ மருத்துவர்களின் பரிந்துரைகள் இருந்தால் மட்டுமே நோயெதிர்ப்பு மருந்துகளை வாங்க முடியும். சாதாரண வலி நிவாரணிகளைப் போல மருந்துக் கடைகளில் அவற்றைப் பெற முடியாது. ஆனால், இந்தியாவில் அனைத்து மருந்துக் கடைகளிலும் நோயெதிர்ப்பு மருந்துகள் கிடைக்கிறது. ஆனால், அதற்கு மருத்துவரின் பரிந்துரையின்றி வாங்கிக்கொள்ளலாம் என்று அர்த்தமில்லை. மருத்துவர்களின் பரிந்துரையுடன் வாங்குவது நல்லது. ஏனெனில் நோயெதிர்ப்பு மருந்துகளை அதிகம் பயன்படுத்தினாலோ, தவறாகப் பயன்படுத்தினாலோ ஆபத்துதான். 

Story image

பழைய மருந்துச் சீட்டுகளை பயன்படுத்தி நோயெதிர்ப்பு மருந்துகளை மீண்டும் பெறலாம். 

ஒரு வருடத்திற்கு முன்போ அல்லது சில மாதங்களுக்கு முன்போ மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை நோயாளிகள் மீண்டும் அதே மருந்துச் சீட்டைப் பயன்படுத்தி வாங்குவது வழக்கத்தில் இருக்கிறது. அது அந்த நேரத்தில் அப்போதைய உடல்நிலைக்கு ஏற்ப மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டது. தற்போது அதே அறிகுறிகள் இருந்தாலும் நிலைமை என்பது வேறு. எனவே, மருத்துவரை கலந்தாலோசிக்காமல் முன்னதாக பரிந்துரைக்கப்பட்ட பழைய மருந்துகளை எடுத்துக்கொள்வது சரியானது அல்ல. 

சிறிது உடல்நலம் தேறி வரும்போது நோயெதிர்ப்பு மருந்து எடுத்துக்கொள்வதை நிறுத்திவிடலாம். 

முழுவதுமாக உடல்நலம் தேறுவதற்கு முன்னரே மருந்துகளை நிறுத்தினால் உடலில் எஞ்சியிருக்கும் பாக்டீரியா நோய்த்தொற்றை அதிகரிக்கலாம். எனவே முழுமையாக குணமடையும் வரை நோயெதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.