பொதுவாக கோடைக் காலத்தில்தான் குடும்பத்துடன் சுற்றுலா செல்வார்கள். அவ்வாறு செல்வது பெரும்பாலும் ஊட்டி, கொடைக்கானலாகவும், ஏற்காடு, ஏலகிரியாகவும் இருக்கும்.
ஆனால், பலருக்கும் தெரியாத விஷயம், மழைக்கால சுற்றுலா. மழைக்காலத்தில் எப்படி சுற்றுலா செல்வது? மழைக்காலத்தில் சுற்றுலா செல்ல ஏற்ற இடங்கள் குறித்து ஒரு பார்வை..
மழைக்காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் பல இடங்கள் பசுமையாகக் கணப்படும். அதில் ஓரிடம் மூணாறு. தேயிலைத் தோட்டங்களை நல்ல மழைக்காலத்தில் சென்று பார்க்கும்போதும், அங்கிருக்கும் சிற்றருவி மற்றும் ஓடைகளில் நீரோடுவதும் சுற்றுலாவுக்கு ஏற்றது.
சிலர், இப்பகுதிகளில் மலையேற்றம் செல்வார்கள். நிச்சயம் மழைக்காலத்தில் இப்பகுதியில் மலையேற்றம் செல்வது அவ்வளவு சிறப்பானதாக இருக்கும்.
கோவா.. மிகச் சிறந்த சுற்றுலா தளம். மிகக் குறைந்த செலவில் கோவாவை சுற்றிப்பார்க்க ஏற்ற நேரம் மழைக்காலம்தான். விமானக் கட்டணம் முதல், விடுதிகள், உணவகங்கள் என அனைத்தும் கட்டுபாடியாகும் விலையில் கிடைக்கும். கோடைக்காலத்தில் கோவாவும் கொளுத்தும் என்பதால் இது நல்ல நேரம்.
அதிக ஏரிகள், துறைமுகம் மற்றும் அரண்மனை கொண்ட உதைப்பூர் மழைக்காலத்தில் சுற்றுலாவுக்கு ஏற்ற இடம். பல ஏரிகள் நிரம்பி வழிந்து கண்கொள்ளாக் காட்சியாகக் காணப்படும்.
கூர்க்.. சொல்லவே வேண்டாம். இங்கு மழைக்காலத்தில் ஆங்காங்கே திடீர் திடீர் என முளைக்கும் சிற்றருவிகள் மற்றும் ஓடைகள் அப்பகுதியையே சொர்க்கமாக்கிவிடுகிறது.
நீர்வீழ்ச்சிகள் உங்களைத் துரத்த வேண்டும் என்றால், மழைக்கான இடமாக சிரபுஞ்சி செல்லுங்கள்.
ஆலப்புழா பொதுவாக பசுமையாக இருந்தாலும், மழைக்காலத்தில் கால்வாய்களில் தண்ணீர் ஓடுவதும், பயிர்கள் செழிப்படைந்து வளர்ந்து இருப்பதும் நிச்சயம் நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்.
கடைசியாக மேகமலை.. மேகக் கூட்டங்களைச் சேர்த்துக் கொண்டு உலா போகும் இடம். தேயிலைத் தோட்டங்களையும், வனப்பகுதிகளையும் காண இந்த நேரம் மிகச் சிறந்ததாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செய்யாறு: ஜூன் 28-இல் தீவிர போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்
இன்றைய ராசி பலன் (26.06.2026) - துலாம்
இன்றைய ராசி பலன் (26.06.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (26.06.2026) - மகரம்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



