மன அழுத்தத்தைப் போக்க வழங்கப்படும் மருந்துகள் போதைப்பொருளா? அவற்றை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டுமா? ஒருமுறை எடுக்கத் தொடங்கிவிட்டால் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டுமா?
மன அழுத்த மருந்துகள்/மாத்திரைகள் (antidepressantsx-ஆண்டிடிப்ரசண்ட்ஸ்) குறித்த தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மனநல மருத்துவத் துறையின் துணை பேராசிரியர் டாக்டர் ஆர். ஜெயசீலன்.
மன அழுத்த மருந்துகள் போதைப்பொருளாக இருக்கலாம்.
மன அழுத்தத்தைப் போக்குவதற்கு வழங்கப்படும் மருந்துகள் போதைப்பொருள் இல்லை. ஆனால் திடீரென இந்த மருந்துகளை உட்கொள்வதை நிறுத்துவது எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம். இந்த அறிகுறிகள் சில நாட்களில் சரியாகிவிடும்.
மன அழுத்த மருந்துகளை எடுக்கத் தொடங்கிவிட்டால் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும்.
ஒவ்வொரு நபரைப் பொருத்தும் சிகிச்சையின் காலம் மாறுபடும். சிலருக்கு இது நீண்ட காலத் தேவையாக இருக்கலாம். சிலருக்கு குறுகிய காலம் தேவைப்படலாம். மருத்துவ பரிசோதனைக்குப் பின்னரே மன அழுத்த மருந்துகளை நிறுத்த வேண்டும்.
இதையும் படிக்க | குழந்தைகளுக்கு இந்த 10 உணவுகளைக் கொடுக்காதீர்கள்!!
மன அழுத்த மருந்துகளை நீண்ட காலத்திற்குப் பயன்படுத்துவது சிறுநீரகத்தை சேதப்படுத்தும்.
இது தவறானது. எனினும் எந்தவொரு மருந்தையும் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தும்போது வழக்கமான பரிசோதனைகளைச் செய்வதும் பக்கவிளைவுகளைக் கண்காணிப்பதும் அவசியம்.
மன அழுத்த மருந்துகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை
கண்டிப்பாக தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும், ஒழுங்கற்ற முறையில் மருந்துகளை எடுத்துக்கொள்வது பலனளிக்காது.
மன அழுத்த மருந்துகளை உட்கொள்வது ஒருவரின் குணாதிசயங்களை மாற்றும்.
இல்லை. இந்த மருந்துகள் முக்கிய குணாதிசயங்களை மாற்றாது. ஒருவரின் நடத்தை மற்றும் மனநிலை மாற்றங்களைத் தணிக்கவே அவை பயன்படுத்தப்படுகின்றன. உண்மையில் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு வழங்கப்படும் மருந்துகள், நோயாளிகளை மனச்சோர்வு அறிகுறிகளில் இருந்து விடுத்து இயல்பு நிலைக்குத் திரும்ப உதவுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தேர்வர்களின் மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் தொடங்கிய தமிழக அரசு!

எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

மூலப் பெயரிலான மருந்துகளை பரிந்துரைக்க அறிவுறுத்தல்

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை
